சுஜாதா - நீதிக் கதைகள் - கழுகு

Ads Below The Title
ஒரு கழுகு சுதந்திரமாகப் பறந்து சென்றுகொண்டிருந்தது. விஷ் என்ற சப்தம் கேட்டு அது என்ன என்று பார்ப்பதற்குள் ஒரு அம்பு அதைத் தாக்க, அடிபட்டு தன் இறக்கை இழந்து சுழன்று சுழன்று சொத்தென்று கீழே விழுவதற்கு முன் தன்னைத் தைத்த அம்பை ஒரு தடவை பார்த்தது. கூர்மையான முனை, நீண்ட உடல், அதன் வாலில் கழுகிறகு! ‘அடப்பாவமே!’ என்று சொல்லிகொண்டே செத்துப்போனது.

நீதி : பல தடவை நம் எதிரிகளுக்கு நம்மை அழிக்க நாமே உதவி செய்து தருகிறோம்.


-புதிய நீதிக் கதைகள் புத்தகத்தில் சுஜாதா
சுஜாதா - நீதிக் கதைகள் - கழுகு சுஜாதா -  நீதிக் கதைகள் -  கழுகு Reviewed by haru on September 29, 2011 Rating: 5

No comments