Ads Below The Title

காப்பாற்ற கடவுள் வருவார்?

ஒருவர் எதெற்கெடுத்தாலும் கடவுள் பார்த்துக்குவார்னு சொல்லிகொண்டே இருப்பான்.  ஒருநாள் அவர் வாழ்ந்த ஊரில் அடைமழை, வெள்ளம் வந்துவிட்டது.    ஊரார் எல்லாம் வெளியேறி கொண்டிருந்தார்கள்,  ஊரார் வெளியேறும் போது அவரையும் அழைத்தார்கள், ஆனால் அவனோ, இல்லை என்னை காப்பாற்ற கடவுள் வருவார் என்று சொல்லி அங்கேயே இருந்தானாம். வெள்ளம் பெருகிவிட்டது. 

பிறகு ஒரு சிறு மரக்கட்டையில் ஒருவர் வந்து வாருங்கள் இதில் தப்பிப் போகலாம் என்றாராம்.  அதற்கும் அந்த நபர், இல்லை கடவுள் வந்து என்னைக் காப்பாற்றுவார் என்று சொன்னாராம்.  பிறகு வானூர்தியில் [helicopter] வந்து இறுதி அழைப்பு கொடுத்தார்கள் இதுலாவது தப்பி வாருங்கள் என்று கூப்பிட அவர் மறுத்து, என்னைக் காப்பாற்ற கடவுள் வருவாராம் என்று சொன்னாராம்.  இறுதியில் வெள்ளம் அதிகமாகி அதனுடன் அடித்து சென்று அவன் இறந்துவிட்டான்.

மேலே இறைவனிடம் சேர்ந்தார்.  அவன் இறைவனை பார்த்து  கேட்டாராம், நான் உன் அதீத பக்தன் என்னை ஏன் நீ காப்பாற்ற வரவில்லை என்று.  அதற்கு கடவுள் சொன்னாராம்,

அட முட்டாளே நான் உன்னைக் காப்பாற்ற மூன்று முறை வெவ்வேறு வழிமுறையில் வந்தேன், நீ தான் வர மறுத்துவிட்டாய் என்றாராம்.
இறைவன் இப்படித் தான் ஏதாவது ஒரு வழியில் தான் உதவுவார்.  வாய்ப்புகள் இப்படி தான் வரும், கடவும் வருவார்ன்னு உட்கார்ந்து இருந்தால் ஒன்றும் அகபோவதில்ல, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்துங்கள், வாழ்வில் முன்னேறுங்கள் 
காப்பாற்ற கடவுள் வருவார்? காப்பாற்ற கடவுள் வருவார்? Reviewed by haru on March 30, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]