Ads Below The Title

கொல்லும் உள்ளுணர்வை விட வாழும் உள்ளுணர்வு பெரியது

வேடன் ஒருவன் தன்னுடைய வேட்டை நாயைக் கூட்டிகிட்டு வேட்டைக்குப் போனான்.

காட்டில் ஒரு முயலைப் பார்த்தார்கள். வேடன் அந்த நாயிடம் சொன்னான், “நீ ஓடிப் போய் அந்த முயலைப் பிடித்து உன்னுடைய உணவாக்கிக் கொள்” என்று. நாய் வேகமாக முயலைத் துரத்திகொண்டு ஓடியது. ஆனால் முயல் அதை விட வேகமாக ஓடி, வேட்டை நாயிடமிருந்து தப்பி சென்றுவிட்டது. தோல்வியுடன் திரும்பி வந்த நாயைப் பார்த்து வேடன் கேலி செய்தான். “உனக்கு வேகமாக ஓடி, இரையைப் பிடிக்க கொடுத்த பயிற்சியெல்லாம் என்ன ஆச்சு?, ஒரு சின்ன முயலிடம் தோற்றுவிட்டாயே” என்று.

நாய் சொல்லியது, “நான் ஓடியது என்னுடைய ஒரு வேளை உணவுக்காக, ஆனால் அந்த முயல் ஓடியதோ தன்னுடைய உயிரைக் காப்பாத்திக்க”

நம்முடைய நோக்கமும் முயற்சியும் தீவிரமானதாக இருந்தால், நம்மை விட வலியவனவற்றையும் ஜெயிக்கலாம்.

கொல்லும் உள்ளுணர்வை விட வாழும் உள்ளுணர்வு பெரியதுதானே!
கொல்லும் உள்ளுணர்வை விட வாழும் உள்ளுணர்வு பெரியது கொல்லும் உள்ளுணர்வை விட வாழும் உள்ளுணர்வு பெரியது Reviewed by haru on March 13, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]