எது சிறந்தது - அன்பா, செல்வமா, வெற்றியா?

Ads Below The Title
ஒரு ஊரில் கோபு  தன் தாய் தந்தையுடன் வசித்துவந்தான். அப்போது அவன் வீடட்டின் முன் மூன்று நபர்கள் வந்து ' உள்ளேவரலாமா ' என்று கேட்டனர்.

கோபுவின் தந்தை 'வாருங்கள்' என்றார்.

ஐயா! 'நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது!. யாராவது ஒருவர் தான் வரமுடியும்.

என் பெயர் பணம்...இவர் பெயர் வெற்றி...இவர் பெயர் அன்பு..எங்கள் மூவரில் ஒருவர் தான் ஒரு வீட்டிற்குள் செல்லமுடியும்.. எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள்' என்றார் பணம் எனப்படுபவர்.

கோபுவின் தந்தை ' வெற்றியை அழைக்கலாம்..நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றியடையலாம்' என்றார்.

ஆனால் கோபுவோ ...'அப்பா! பணத்தையே உள்ளே அழைக்கலாம் நம்மிடம் பணம் சேர்ந்துவிட்டால்...எல்லாவற்றையும் வெற்றி உட்பட அனைத்தையும் வாங்கலாம்' என்றான்.

ஆனால் கோபுவின்  தாயோ 'வேண்டாம் அன்பையே அழைக்கலாம்.அன்பு தான் முக்கியம்' என்றாள்.

பின் மூவரும், 'அன்பு உள்ளே வரட்டும்' என்றனர்.

அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து வெற்றியும், பணமும் கூட உள்ளே நுழைந்தனர். உடனே கோபுவின் அம்மா'அன்பை மட்டும் தானே உள்ளே அழைத்தோம்' என்றார்.

அன்பு சொன்னார்,' நீங்கள் பணத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே நின்றிருப்போம். ஆனால் அன்பான என்னை வரச் சொன்னதால்..நான் இருக்கும் இடத்தில் தான் பணமும், வெற்றியும் இருக்கும்..ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர்'

அன்பு உள்ளம் இருந்தால்..நம் வாழ்வில் வெற்றியும்,தேவையான வசதிகளும் தானாகவே வந்துவிடும்.

அன்பே சிவம்...அன்பே முக்கியம்.

ஆண்டு பற்றி வள்ளுவனின் வாக்கு

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

அன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும். இல்லையேல் ,அது வெறும் எலும்புத்தோல் போர்த்திய வெறும் உடலாகும். சுருங்கச் சொன்னால்..அன்பு மனம் கொண்டவர்களே மனிதர்கள் ஆவர்.
நன்றி: பணிப்புலம்
எது சிறந்தது - அன்பா, செல்வமா, வெற்றியா? எது சிறந்தது - அன்பா, செல்வமா, வெற்றியா? Reviewed by haru on March 30, 2012 Rating: 5

No comments