Ads Below The Title

நாமே கடவுள் ஆகி விட முடியாது

ஒரு கடுமையான உழைப்பாளி. எப்போதுமே ஏதாவது ஒரு ஆராய்ச்சியை அவரது அறையை தாழிட்டு செய்து கொண்டிருப்பார்.ஏனெனில் அவர் ஆராய்ச்சி செய்யும் சமயத்தில் யாரும் அவரை தொந்தரவு செய்வது அவருக்கு பிடிக்காது. எனவே எப்போதும் அதாவது அவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் சமயங்களில் அவரது கதவுகள் அடைக்கப்பட்டு இருக்கும்.

அவ்வாறு இருக்க அவரை இடையுறு செய்யவும் இரண்டு ஜீவன் அந்த வீட்டில் இருந்தன. அவை அவரது செல்ல பிராணிகளான இரு பூனைகள்.அதில் ஒன்று பெரியது மற்றொன்று சிறியது. இவர் ஏதாவது ஒரு ஆராய்ச்சியில் முழ்கி இருப்பார் அந்த சமயம் இந்த இரு பூனைகள் வெளியே செல்ல நினைத்து கத்தி கூப்பாடு போடுமாம்.

இதனால் அவர் பல ஆராய்ச்சிகளில் சிந்தனைகளை தவற விட்டாராம். பிறகு தமது வேலையாளை மிக ஆணவத்தோடு அழைத்து,இந்த கதவில் இரு துளைகளை இடு, ஒன்று பெரியது, மற்றொன்று சிறியது. இந்த இரு ஓட்டைகளை பயன்படுத்தி அந்த இரு பூனைகளும் வெளியில் சென்றுவிடும். என்னுடைய ஆராய்ச்சிக்கு எவ்வித பங்கமும் வந்து சேராது என கூறினாராம்.

அவரது வேலையாள், திடீரென ஐயா, ஒரு பெரிய துளை இட்டாலே இரண்டும் வரும்,போகும்.அப்படி இருக்க மற்றொரு துளை அவசியமா? என்றாராம். இப்படி ஒரு கேள்வியை அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லையாம். அன்றோடு அவரின் ஆணவம், மமதை அனைத்தும் பொடி பொடியாகின.

பிறகு அவர் கூறியதை நினைத்து தன்னை தானே கடிந்து கொண்டாராம். அவர் தான் E=mc2 என்ற சமன்பாட்டை கண்டு பிடித்த ஐன்ஸ்டீன். தான் தான் கண்டுபிடித்தோம் அதனால் நாமே கடவுள் ஆகி விட முடியாது என்பது அவருக்கு நன்றாக உரைத்ததாம். எனவே நண்பர்களே யானைக்கும் அடி சறுக்கும் என்பதை மறவாதீர்கள்.
நாமே கடவுள் ஆகி விட முடியாது நாமே கடவுள் ஆகி விட முடியாது Reviewed by haru on April 21, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]