Ads Below The Title

தெனாலிராமன் கதைகள் - தெனாலிராமனும் கத்தரிக்காயும்

தெனாலிராமனும் கத்தரிக்காயும்:
         ஒரு முறை தெனாலிராமனுக்கு கத்தரிக்காய்சாப்பிட வேண்டும் என்று அதீத விருப்பம்ஏற்ப்பட்டது. அரண்மனைத் தோட்டத்தில் பிஞ்சு கத்திரிக்காய் அதிகமாகவிளைந்திருப்பதைக் கேள்விப்பட்டார்

ஆனால் அது அரசாங்கத்திற்குச் சொந்தமானது. நாம் உபயோகிக்கக் கூடாது என்ன செய்வது. என்னவென்றாலும் இன்று கத்தரிக்காய் சாப்பிட்டேதீருவது என்று தீர்மானித்த தெனாலிராமன்ஒரு ஆலோசனை செய்தார். காவலாளிக்குதெரியாமல் கத்தரிக்காய் அனைத்தையும் சத்தமில்லாமல் பறித்துக் கொண்டார்.

வீட்டுக்குசென்று மனைவியிடம் "இன்றைக்கு விதவிதமாய் கத்தரிக்காய் பதார்த்தம் செய்" என்றார். தெனாலிராமன் கொண்டுவந்த கத்தரிக்காய் அரண்மனை தோட்டத்திலிருந்து பறித்துவந்தது என்று தெரிந்ததும் தெனாலிராமனதுமனைவி மிகவும் கலக்கமடைந்தார்.

தெனாலிராமன்"நீ பயப்படாதே! எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ சமைத்து வை" என்றார். அவரது மனைவியும் மறுபேச்சு பேசாமல் கத்தரிக்காய் குழம்பு, கத்தரிக்காய் கூட்டு என்று விதவிதமாக செய்து வைத்தார். இருவரும்சாப்பிடத்தயாரானார்கள்

தெனாலிராமன்தனது மகனை எங்கே என்றுகேட்டார். அவன் வெளித்தின்னையில் படுத்துஉறங்கிக் கொண்டிருப்பதை மனைவி தெரிவித்தார். உடனேதெனாலிராமனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

அவர் ஒரு குடம் நிறையதண்ணீரைக் கொண்டுவந்து தின்னையில் படுத்திருந்த தனது மகன் மீதுஊற்றினார். பதறியடித்து எழுந்த மகனைப் பார்த்து"வெளியே மழை பெய்கிறது, உள்ளேபோய் படுத்துக் கொள்" என்று கூறினார்

அரைத்தூக்கத்தில்இருந்த மகனும் அவர் சொன்னதைக்கேட்டவுடன் வேக வேகமாக வீட்டுக்குள்சென்றான். படுத்துறங்கப் போன்றவனை தெனாலிராமன் எழுப்பி "கத்தரிக்காய் சாப்பாடு ருசியாய் இருக்கிறது, சாப்பிட்டு விட்டு தூங்கு" என்றுகூறினார்.

அவனும்தூக்கக்கலக்கத்துடனேயே நன்றாகச் சாப்பிட்டான். பிறகு எல்லோரும் படுத்துநிம்மதியாய் தூங்கினார்கள்.

மறுநாள்தெனாலிராமன்அரண்மனைத் தோட்டத்தில் கத்தரிக்காய் பறித்த விஷயம் எப்படியோமன்னருக்குத் தெரிந்து போனது

மன்னர்தெனாலிராமனை அழைத்து வரச் சொன்னார். நடக்கப் போவதை யூகித்துக் கொண்டதெனாலிராமனும் மன்னர் முன் சென்றுநின்றார்

மன்னர்தெனாலியைப் பார்த்து கேட்டார்" தெனாலிராமா! அரண்மனைத் தோட்டத்தில் கத்தரிக்காய் எல்லாம் காணாமல் போனதுஉனக்குத் தெரியுமா ? என்றார். தெனாலிராமனோ எதுவும் அறியாதது போல"என்ன? அரண்மனைத் தோட்டத்துக் கத்தரிக்காய் காணாமல் போனதா?" என்றார்

மன்னரோவிடுவதாய் இல்லை. "ஒன்றும் அறியாதது போல்கேட்கிறாய் ராமா! நீ தான்கத்தரிக்காய் அனைத்தயும் பறித்ததாக நான் கேள்விப்பட்டேன். உண்மையைஒத்துக் கொள்" என்றார். தெனாலி ராமனோ "இல்லவேஇல்லை" என்று சாதித்தார்

மன்னர்உடனே தெனாலிராமா "நீ உனது மகனைஅழித்துவா. குழந்தைகள் பொய் சொல்லாது. நேற்றுநீங்கள் என்ன சாப்பிட்டீர்கள் என்பதைநான் உன் மகனை விசாரித்துதெரிந்து கொள்கிறேன். " என்றார்

தெனாலிராமனதுமகனை காவலாளிகள் அழைத்து வந்தார்கள். மன்னன்சிறுவனிடம் அன்பாக விசாரித்தார். "தம்பிநேற்று உஙகள் வீட்டில் என்னசாப்பிட்டீர்கள்?" உடனே சிறுவன் சொன்னான்"கத்தரிக்காய் குழம்பு, கத்தரிக்காய் கூட்டு மற்றும் சாதம்எல்லாம் சாப்பிட்டோம். மிகவும் ருசியாக இருந்தது." 

உடனே மன்னன் தெனாலிராமனைப் பார்த்தார். இப்போது மாட்டிக் கொண்டாயா தெனாலிராமா. இபோதாவது உண்மையை ஒத்துக் கொள்" என்றார். தெனாலிராமனோ விடாப்பிடியாக மறுத்தார். "மன்னா, இவன் இரவில்கனவு கண்டு அதை உளறுகிறான். நன்றாக விசாரியுங்கள். நீங்கள் நம்பும்படியாக அவன்கூறினால் நான் உண்மை எனஒத்துக் கொள்கிறேன்". என்றார்

மன்னன்சிறுவனைப் பார்த்து மீண்டும் கேட்டார். "குழந்தாய் நேற்று உங்கள் வீட்டில்என்ன நடந்தது என்று விளக்கமாகச்சொல்" சிறுவனோ நேற்று இரவுஜோ வென்று மழை பெய்ததா! அப்பா என்னை வீட்டுக்குள் கூட்டிக்கொண்டு போனாரா...! அப்போ கத்தரிக்காய் வைத்துசாப்பிடச் சொன்னார்களா...! சாப்பிட்டிவிட்டு பிறகு நான் உறங்கிவிட்டேன்" என்றான்

தெனாலிராமனோநேற்று மழை பெய்ததா மன்னா! நீங்களே சொல்லுங்கள் என்று மன்னரை கேள்விகேட்டார்

மன்னர்குழம்பிப் போனார். அவையில் இருந்தவர்களைவிசாரித்தார். நேற்று நகரத்தின் எந்தப்பகுதியிலும்மழை பெய்யவில்லை என்று எல்லோரும் சொன்னார்கள்

மன்னரும்சரி தெனாலிராமன் சொன்னதைப்போல குழந்தை கனவில் கண்டதைத்தான்சொல்கிறான் என்று சொல்லி தெனாலிராமனையும்விடுவித்தார். மனதிற்குள் மகிழ்ந்து கொண்டே தெனாலிராமனும் இடத்தைகாலிசெய்தார்

பிறுதொருநாள்மன்னரிடம் தாம்தான் கத்தரிக்காயை திருடியதாக ஒத்துக் கொண்டு நடந்தவைகளைசொல்ல மன்னர் ஆச்சரியமாத்துடன் சிரித்துமகிழ்ந்தார். பிறகு தெனாலிராமனின் சாதுர்யத்தைமெச்சி பல பரிசுகளை அளித்துமகிழ்ந்தார்.



தெனாலிராமன் கதைகள் - தெனாலிராமனும் கத்தரிக்காயும் தெனாலிராமன் கதைகள் - தெனாலிராமனும் கத்தரிக்காயும் Reviewed by haru on June 17, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]