Ads Below The Title

little horse tamil story

விவசாயி ஒருவன் தன் வீட்டின் கொல்லைப் புறத்தில் தண்ணீருக்காக கிணறு ஒன்றைத் தோண்டினான். பாதி தோண்டும்போதே இது வீண் வேலை என்பதும், தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதையும் புரிந்து கொண்டு வேலையை பாதியிலேயே நிறுத்தி விட்டான்.
தோண்டிய குழியை மூடவும் நிறைய கூலி கொடுக்க வேண்டும் என்பதால் காசு வரும்போது மூடிக்கொள்ளலாம் என்று கருதி பள்ளத்தைச் சுற்றிலும் பாதுகாப்பாக ஒரு சிறிய வேலியை மட்டும் அமைத்தான்.
ஒரு நாள் அவன் வீட்டில் இருந்த குட்டிக்குதிரை கொல்லையில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாக அந்தக் குழிக்குள் விழுந்து விட்டது. விவசாயி எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தான். குட்டியை அத்தனை ஆழத்திலிருந்து தூக்கி எடுக்க வழி தெரியவில்லை. கூலியாட்களைக்
கொண்டு அதை வெளியே எடுக்கலாம் என்றால் குதிரைக் குட்டியின் விலையை விட, அதை வெளியில் எடுக்கும் செலவு அதிகம்.
அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே செய்தியைக் கேள்விப்பட்டு ஊரே திரண்டு வந்து விட்டது. கூட்டத்தைப் பார்த்ததும் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. "குட்டியை அப்படியே விட்டு விட்டால் அது செத்துப் போய் பல நாட்களுக்கு நாற்றம் எடுக்கும். வந்திருக்கும் ஒவ்வொருத்தரும் தன் பங்குக்கு ஒரு சட்டி மண்ணை அள்ளிப் போட்டால் குதிரைக்குட்டியும் சமாதியாகும் , கிணறும் மூடப்பட்டுவிடும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்".
உடனே தனது எண்ணத்தை வெளிப்படுத்தினான். அனைவரும் ஒத்துக் கொண்டனர். நல்லா இருக்குற ஜீவன் மேல மண்ணை அள்ளிப் போடுறதுன்னாதான் எல்லாருக்கும் பிடிக்குமே. ரொம்ப உற்சாகமாக ஒவ்வொருவராய் மண்ணள்ளிப் போட்டார்கள்.
ஆனால் நடந்ததோ வேறொன்று. இவர்கள் குதிரைக் குட்டியின் மேல் மண்ணை அள்ளிப் போடப்போட அது தன் உடலை உதறிக்கொண்டு மண்ணையெல்லாம் கீழே தள்ளி அதன் மேல் ஏறி நின்றது. கடைசியில் எல்லாரும் கொட்டிய மண்ணில் கிணறே நிரம்பிவிட்டது.
கிணறு நிரம்பும் போது குதிரைக் குட்டி அழகாய் வெளியே வந்து விட்டது. சமாதிகட்டுவதற்காகக்
கொட்டிய மண்ணையே படிக்கற்களாக்கிக் கொண்டது.

செல்லமே! கர்த்தரை விசுவாசிக்கிற மக்களும் இப்படித்தான். தன் மேல் இறைக்கப் படுகிற மண்ணைக்கூட மேடையாக்கி அதுக்கு மேல ஏறி நின்னு கர்த்தரைத் துதிச்சு பிரசங்கம் பண்ண ஆரம்பித்து விடுவார்கள்.
" தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம். இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம் "
1 கொரிந்தியர் 4 :13
little horse tamil story little horse tamil story Reviewed by haru on September 22, 2016 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]