SINGATHIRKU VAALAI PALAM TAMIL STORY

Ads Below The Title

சிங்கத்திற்கு வாழைப்பழம்

ஒரு சர்க்கஸ் குழுவிடம் சிக்கிக் கூண்டில் அடைபட்டுக் கிடந்த அந்த சிங்கத்துக்கு தினமும் சாப்பிட ஒரு கிலோ கறி (இறைச்சி) மட்டுமே கொடுத்தார்கள். காட்டில் சுதந்திரமாக சுற்றி திரிந்து மான்களை கணக்கில்லாமல் வேட்டையாடித் திரிந்த நாட்கள் அதன் நினைவுகளில் வந்து ஏக்கத்தைக் கூட்டியது. அந்த நாட்கள் திரும்பவும் வராதா என்று இறைவனை அது வேண்டியது.

ஒரு நாள் அமெரிக்காவிலிருந்து வந்த மிருகக்கட்சிசாலை உரிமையாளர் அதை விலைக்கு வாங்கினார். சிங்கம் கப்பலில் ஏற்றப்பட்டு அமரிக்காவுக்கு பயணமானது. தனது பிரார்த்தனைகள் பலித்து விட்டதாக சந்தோசப்பட்டது அது. தனக்கு ஏ.சி அறை கொடுத்து, தினமும் ஒன்றிரண்டு ஆடுகளையாவது சாப்பிடக் கொடுப்பார்கள் என்று நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டது.

அமரிக்காவில் சென்று இறங்கிய முதல் நாள் காலையில் அதற்கு அழகாக பேக் செய்யப்பட்ட ஒரு பார்சலில் டிபன் கொடுத்தார்கள். ஆசையோடு அதைப் பிரித்த சிங்கம், உள்ளே வாழைப்பழங்கள் மட்டுமே இருபத்தை பார்த்து ஏமாந்து போனது. நாடு விட்டு நாடு மாறி வந்திருக்கும் நேரத்தில், கறி கொடுத்தால் வயிறு கெட்டுவிடும் என்ற கவலையில் தருகிறார்கள் என நினைத்தது அது.

ஆனால் அடுத்த நாளும் வாழைப்பழம்தான் கொடுத்தார்கள். மூன்றாவது நாள் பார்சல் கொண்டு வந்து கொடுத்தவனை கொஞ்சம் நிற்கச் சொல்லிவிட்டு பிரித்துப் பார்த்தது. அன்றும் அதே பார்சல்!. கொடுத்த ஆசாமியைக் கோபத்தோடு ஓங்கி அறைந்துவிட்டு, நான் யார் தெரியுமா? காட்டுக்கே ராஜாவான சிங்கம், எத்தனை விலங்குகளை வேட்டையாடிச் சாப்பிடுவேன் தெரியுமா? கேவலம் எனக்கு வாழைப்பழம் தருகிறீர்கள். என்ன ஆச்சு உங்கள் நிர்வாகத்துக்கு! என்று சத்தம் போட்டது.

பார்சல் கொடுத்தவன் பணிவாகச் சொன்னான் ... ஐயா! தாங்கள் சிங்கம் என்பது எனக்குத் தெரியும் ஆனால் நீங்கள் இங்கு வந்திருப்பது குரங்கின் விசாவில் அதனால் குரங்குக்கான உணவைத்தான் உங்களுக்கு தரமுடியும்!
SINGATHIRKU VAALAI PALAM TAMIL STORY SINGATHIRKU VAALAI PALAM TAMIL STORY Reviewed by haru on October 18, 2016 Rating: 5

No comments