Ads Below The Title

சிறுவர் நீதிக்கதைகள் - முட்டாள்!

முட்டாள்!
ஓர் ஊரில் முட்டாள் ஒருவன்இருந்தான். அந்த ஊர் மக்கள்எல்லாருக்கும் விளையாட்டுப் பொருளே அவன்தான். அவனிடம்இரண்டு துணிகளைக் கொடுத்துப் போட்டுவரச் சொன்னால், காலில் அணிய வேண்டியதுணியைச் சட்டை போல் மேலேஅணிந்து இருப்பான். மேலே அணிய வேண்டியதுணியை எப்படியாவது காலுக்குள் நுழைத்து அணிந்து வருவான். அந்தக்கோலத்தில் அவனைப் பார்ப்பவர்கள் யாராகஇருந்தாலும் சிரித்து விடுவர்.

அந்த ஊருக்கு விருந்தினர் யார்வந்தாலும் முதலில் அவனை வரவழைத்து, “இவனைப் போன்ற முட்டாள் உங்கள்ஊரில் உண்டா?'' என்று கேட்பர்.


ஒரு வீட்டிற்கு வெளியூரிலிருந்து நண்பர் ஒருவர் வந்தார். விருந்து முடிந்தது.

இந்த ஊரில் முட்டாள் ஒருவன்இருக்கிறான். அவனை வர வழைத்தால், நம் பொழுது இனிதாகப் போகும்,'' என்று சொன்ன வீட்டுக்காரன்... அவனைவரவழைக்க ஆள் அனுப்பினான்.


சிறிது நேரத்திற்குள் அந்த முட்டாள் அங்குவந்து சேர்ந்தான். வீட்டுக்காரன் அவனிடம் தன் இரண்டுகைகளையும் நீட்டி, “நன்றாகப் பார்... ஒரு கையில்ஐந்து ரூபாய் நாணயம் உள்ளது. இன்னொன்றில், ஒரு ரூபாய் நாணயம்உள்ளது. உனக்கு எது தேவையோஎடுத்துக் கொள்,'' என்றான்.

முட்டாள் இரண்டு கைகளையும் மாறிமாறிப் பார்த்தான்.

! ஒரு ரூபாய் பெரியகாசு!'' என்று சொல்லிக் கொண்டேஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக்கொண்டான்.

இவனைப் போன்ற முட்டாளை நீங்கள்எங்கேயாவது பார்த்ததுண்டா? ஒரு ரூபாயை விடஐந்து ரூபாய் எவ்வளவு மதிப்புள்ளது? சின்னக்காசை எடுத்துவிட்டு இவ்வளவு கூத்தாடுகின்றானே?'' என்றுசொன்னான் வீட்டுக்காரன்.

நண்பருக்கும், முட்டாளுடன், விளையாட வேண்டும் போலஇருந்தது. தன் இரண்டு கைகளையும்அவன் முன் நீட்டி, “இதில், ஒன்றில் வைர மோதிரம் உள்ளது. இன்னொன்றில் வெறும் ஐம்பது காசுஉள்ளது. ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்,'' என்றார் அவர்.

முட்டாள் இரண்டு கைகளையும் மாறிமாறிப் பார்த்துச் சிந்தித்தான். ஐம்பது காசைத்தான் கடைசியாகஎடுத்தான்.

இந்த முட்டாளோடு நீங்கள் பேசிக் கொண்டுஇருங்கள். எனக்கு வேலை இருக்கிறது,'' என்று உள்ளே சென்றார் வீட்டுக்காரர்.

ஏன் முட்டாள்தனமாக நடக்கிறாய்? வைர மோதிரம் என்னமதிப்புடையது? அதை விட்டுவிட்டு வெறும்ஐம்பது காசை எடுத்துக் கொண்டாயே... இனிமேலாவது சிந்தித்து, அறிவுள்ளவனாக நடந்து கொள்,'' என்றுஅறிவுரை சொன்னார் நண்பர்.

ஐயா, நான் மிகக் குறைந்தமதிப்புடைய நாணயங்களையே எடுக்கிறேன். எல்லாரும் என்னை முட்டாள் என்றுநினைத்து என்னிடம் நாணயங்கள் உள்ள கைகளை நீட்டுக்கின்றனர். இதிலேயே எனக்கு ஒரு நாளைக்குநான்கைந்து ரூபாய் கிடைக்கிறது.

நீங்கள் சொல்வது போல ஒரேஒருநாள் விலை குறைவான நாணயத்தைஎடுக்காமல், அதிக மதிப்புடைய நாணயத்தைநான் எடுத்துக் கொண்டால், அதன்பிறகு யாரும் என்னிடம் கையையேநீட்டமாட்டார்கள்,'' என்றான் முட்டாள் 

இதைக் கேட்ட வெளியூர்காரர் அசந்துபோய்விட்டார்.

Source : தினமலர் : சிறுவர் மலர்

சிறுவர் நீதிக்கதைகள் - முட்டாள்! சிறுவர் நீதிக்கதைகள் - முட்டாள்! Reviewed by haru on July 19, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]