Ads Below The Title

தெனாலிராமன் கதைகள் : கிடைத்ததில் சம பங்கு

கிடைத்ததில் சம பங்கு:

ஒருநாள்கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடகநாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லாமுக்கியப்பிரமுகர்களுக்கும்அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில்அரசியும் மற்றும் சில பெண்களும்கலந்து கொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம் செய்துநிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான்என எண்ணி தெனாலிராமனை மட்டும்நாடக அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம்கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர்.

இதை அறிந்தான் தெனாலிராமன் எப்படியாவது அரங்கத்தினுள் சென்று விடுவது எனதீர்மானித்துக் கொண்டான்.நாடகம்நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான் தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான்.

வாயில்காப்பானோ அவனை உள்ளே விடமறுத்து விட்டான். மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன் மசியவில்லை.

இந்நிலையில்தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். "ஐயா, வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால்என்னுடைய திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன்" என்றான். இதைக் கேட்ட வாயிற்காப்போன் முதலில் சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிடைப்பதில்பாதி பரிசு கிடைக்கிறதே என்றுமகிழ்ந்து அவனை உள்ளே விட்டான்.

அரங்கத்தினுள்செல்ல வேண்டுமானால் மீண்டும் இன்னொரு வாயிற் காப்போனைசமாளிக்க வேண்டியிருந்தது. அவனும் தெனாலிராமனை உள்ளேவிட மறுத்தான். முதற் வாயிற் காப்போனிடம்சொல்லியதையே இவனிடமும் சொன்னான். இவனும் பாதி பரிசுகிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனைஉள்ளே விட்டுவிட்டான்.

ஒருவருக்கும்தெரியாமல் தெனாலிராமன் ஓர் மூலையில் போய்உட்கார்ந்து கொண்டான்.

அப்போதுகிருஷ்ணன் ஆக நடித்தவன் வெண்ணைதிருடி கோபிதைகளிடம் அடி வாங்கும் காட்சிநடைபெற்றுக் கொண்டிருந்தது. உடனே மூலையில் இருந்ததெனாலிராமன் பெண் வேடம் அணிந்துமேடையில் தோன்றி கிருஷ்ணன் வேடம்போட்டு நடித்தவனை கழியால் நையப் புடைத்துவிட்டான். கிருஷ்ண வேடதாரி வலிபொறுக்கமாட்டாமல் அலறினான்.

இதைப்பார்த்தமன்னர் கடுங்கோபமுற்று மேடையில் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனைஅழைத்து வரச்செய்தார் பின் "ஏன் இவ்வாறு செய்தாய்" என வினவினார். அதற்குத் தெனாலிராமன் "கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியாஇவன் போல் அவன் அலறினான்" இதைக் கேட்ட மன்னருக்கு அடங்காக்கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனுக்கு 30 கசையடி கொடுக்குமாறு தன்பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைக் கேட்ட தெனாலிராமன் "அரசேஇப்பரிசை எனக்கு கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதிபாதி தருவதாக நம் இரண்டுபாயிற்காப்போன்களிடம் உறுதியளித்து விட்டேன்.

ஆகையால்இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப்பங்கிட்டுக் கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டான். உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும்அழைத்து வரச்செய்து இது குறித்து விசாரித்தார்.

அவ்விருவரும்உண்மையை ஒத்துக் கொண்டார்கள்.

அவ்விருவருக்கும்தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர்பணித்தார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தைப்பாராட்டி அவனுக்குப் பரிசு வழங்கினார்.
தெனாலிராமன் கதைகள் : கிடைத்ததில் சம பங்கு தெனாலிராமன் கதைகள் : கிடைத்ததில் சம பங்கு Reviewed by haru on July 20, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]