Ads Below The Title

சிறுவர் கதைகள் – இரண்டு சீடர்கள்

இரண்டு சீடர்கள்:-
ஒரு காட்டில் கருணைவேந்தன் என்ற முனிவர் ஆசிரமத்தைஅமைத்து தம் சீடர்களுக்குக் கல்விபுகட்டி வந்தார். அவரது சீடர்களில் எல்லாச்சீடர்களையும் விட முன்னதாக விளங்கினர்மகிமைதாசன், சந்துரு என்பவர்கள்.

ஒரு நாள் கருணைவேந்தன் அந்தஇரு சீடர்களையும் அழைத்து, “நீங்கள் இருவரும் என்சீடர்களில் சிறந்தவர்களாக விளங்குகிறீர்கள். நீங்கள் என்னிடம் கற்கவேண்டியது எல்லாம் கற்றாகி விட்டது. இனி உங்கள் இருப்பிடங்களுக்கு செல்லலாம்,'' என்றார்.

குரு சிரேஷ்டரே! எங்களுக்கு இப்போது அபூர்வ சக்திகள்கிடைத்துள்ளன. எங்கள் சக்தி கண்டுமற்ற மனிதர்கள் எங்களைச் சீண்டி துன்புறுத்தினால் நாங்கள்கோபம் அடைந்து அவர்களைச் சபித்தாலும்சபித்து விடுவோம். எங்களுக்குச் சாபம் கொடுக்கத்தான் தெரியும். கொடுத்த சாபத்தை விலக்கும் முறைதெரியாது. எனவே, அதையும் நீங்கள்எங்களுக்குக் கற்பித்தால் எல்லாருக்கும் நன்மை உண்டாகுமே!'' என்றனர்.

அப்படியானால்தன் ஆசிரமத்தில் மேலும் ஒரு மாதம்தங்கும் படிக் கூறினார். இரண்டுவாரங்களுக்குப் பின், “சாபத்தை விலக்கும்முறையை அறிய கடும் உபாசனைமேற்கொள்ள வேண்டும். அது எல்லாராலும் முடியாது. உனக்கு அதனைக் கூறுகிறேன்,'' என்றார்.

சந்துருமிகவும் மகிழ்ந்து போனான். அவன் தன்குரு கூறியபடி உபாசனையை செய்யலானான். அதே சமயம் கருணைவேந்தன்மகிமைதாசனை அழைத்து, “நீ இனியும் இங்கேஇருப்பது வீணே. உன்னால் சாபத்தைவிலக்கும் முறையைக் கற்க முடியாது என்றுஎனக்குத் தெரிந்து போயிற்று. அதனால் மிகுந்த எச்சரிக்கையுடன்நடந்து கொள்,'' என்று கூறிஅவனுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டார்.

சந்துருதன் உபசானையை முடித்துக் கொண்டு குருவிடம் விடைபெற்று தன் ஊருக்குப் போய்ச்சேர்ந்தான். இதற்குப் பின் ஐந்தாறு ஆண்டுகள்சென்றன.

ஒரு நாள் அந்நாட்டு மன்னன்மாரவர்மன், கருணைவேந்தனை தன் தர்பாருக்கு வரும்படிஆட்களை அனுப்பினான். மன்னன் அனுப்பிய ரதத்தில்அமர்ந்து அரண்மனையை அடைந்தார் குரு.

நான் என் தர்பாரில் தகுதியும்திறமையும் பெற்ற ராஜகுரு ஒருவரைநியமனம் செய்ய விரும்புகிறேன். அப்பதவிக்குஏற்றவர்கள் தங்களது சீடர்களான மகிமைதாசனையும், சந்துருவையும் எல்லாரும் பரிந்துரைக்கின்றனர்.

சந்துருநாடெங்கிலும் பயணம் செய்து மிகவும்சக்தி வாய்ந்தவன் எனப் பெயர் பெற்றிருக்கிறான். அவனைக் கண்டு கொடியவர்கள் நடுங்கிதம்மைத் திருத்திக் கொண்டு நல்லவர்களாக ஆகிவிடுகின்றனர்.

அவனுக்குப்பல சீடர்கள் கூட இருக்கின்றனர். அவர்கள்தம்மை "தாச சேனை' எனக்கூறிக் கொண்டு கொடியவர்களைத் தேடிப்பிடித்து தம் குருவின் முன்கொண்டு போய் நிறுத்துகின்றனர். அக்கொடியவர்கள்எங்கே சந்துரு தங்களை சபித்துவிடுவானோ எனப் பயந்து திருந்திவிடுகின்றனர்,'' என்றார்.

அப்படியா? சரி! மகிமைதாசனைப் பற்றி என்ன தெரிந்துகொண்டீர்கள்?'' என்று கேட்டார்.

அவனுக்குசந்துருவைப் போல அவ்வளவு புகழ்இல்லை. அவனுக்குச் சீடர்களும் மிகக் குறைவே. அவன்அவ்வப்போது மக்களை நல்வழிப்படுத்த சொற்பொழிவுகள்ஆற்றி அறிவுரை கூறுகிறான்.''

அவனதுபேச்சைக் கேட்க ஆவலுடன் மக்கள்கூடுகின்றனர். அவனது அறிவுரைக் கேட்டுபலர் திருந்தியும் உள்ளனர். அவனுக்கு மக்களிடையே உயரிய மதிப்பு உள்ளது. ஆனால், அவனிடம் அரிய சக்திகள்உள்ளனவா என்று யாருக்கும் தெரியாது,'' என்றான்.

எனக்குஇருவரில் மகிமைதாசனையே பிடிக்கும். அவனே இந்த ராஜகுருப்பதவிக்கு ஏற்றவன்,'' என்றார். மன்னனும் குருவின் யோசனையை ஏற்று மகிமைதாசனையேராஜகுருவாக அமர்த்தி கொண்டான்.

சந்துருவுக்குதான் சாபத்தை விலக்கும் முறையைக்கற்பித்தார். மகிமைதாசனால் கற்க முடியாது என்றுகூறி ஊருக்கு அனுப்பி விட்டார். ஆனால், ராஜகுருவை நியமிக்கும் விஷயத்தில் மகிமைதாசனையே அப்பதவியில் அமர்த்தும் படிக் கூறினார்.

இதன் காரணம் என்ன என்றுசொல்லுங்கள் பார்ப்போம்.

உலகில்சிலர் புகழ்பெற விரும்புகின்றனர். வேறு சிலர் அடக்கமாகஇருக்கின்றனர். சந்துரு முதல் ரகத்தைச்சேர்ந்தவன். மகிமைதாசன் அடக்கமாக இருந்து தன் சக்தியைவெளிச்சம் போட்டுக் காட்டாமல் இருந்தான். சந்துருவைக் கண்டு மக்கள் பயப்பட்டனர். மகிமைதாசனை விரும்பி அவன் சொல்வதைக் கேட்கக்கூடினர்.

ஒருவன்கோபம் கொண்டாலே சாபம் கொடுப்பான். பிறகுஅதை விலக்குவான். இதனால் கோபம் கொள்பவன்சந்துரு. சாபம் விலக்கத் தெரியாததால்மகிமைதாசன் கோபமே கொள்ளாமல் அமைதியுடன்வாழ்ந்தான். இவற்றை எல்லாம் சீர்துõக்கிப் பார்த்தே அவர்மகிமைதாசனை அப்பதவியில் அமர்த்தும்படிக் கூறினார். அவரது போக்கிலும் முரண்பாடுஇல்லை.

சந்துருவுக்குசாபத்தை விலக்கும் முறையைச் சொல்லிக் கொடுத்தது அவனால் பிறருக்குக் கெடுதல்ஏற்பட்டாலும் அதை விலக்கி நன்மைபுரிய வேண்டும் என்பதற்காகத்தான். மகிமைதாசனால் அவ்வித ஆபத்து ஏற்படாதுஎன உணர்ந்தே அவர் அவனுக்கு அந்தமுறையைக் கற்பிக்கவில்லை,'' எனக் கூறினான்.
சிறுவர் கதைகள் – இரண்டு சீடர்கள் சிறுவர் கதைகள் – இரண்டு சீடர்கள் Reviewed by haru on August 15, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]