Ads Below The Title

சிறுவர் நீதிக்கதைகள் - வலிமை!

வலிமை:

சிங்கமும்கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிங்கம் பசுவைக்கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம்அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலைமட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம்.

கழுதைப்புலியோ"நீ ஏன் குடலைக் கொண்டுவந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?" என்றுகேட்டது. குட்டி கழுதைப்புலி சொல்லியது: "நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வரமுடியும். நான்எப்படி சிங்ஙத்தோடு விவாதிக்க முடியும்" அதைக்கேட்ட கோபமான கழுதைப்புலி அந்தக்குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது.

சிங்கம்உணவை உண்டு குகைக்குள் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும்வகையில் வைத்திருந்தது. "ஏன் இங்கே வந்தாய்?" கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது. பசுவில்பாதி கேட்க வந்த கழுதைப்புலிதற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டுபேசியது: "ராஜ சிங்கமே ! நீங்கள்குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால்அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்துவிட்டோம்."

குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம்குட்டி கேட்டது. பசுவில் பாதி கேட்கப்போனநீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே? "மகனே... சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவேஎனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம்நன்மைக்காக" என்றது தாய் கழுதைப்புலி.

நீதி :நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதைவிட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.
சிறுவர் நீதிக்கதைகள் - வலிமை! சிறுவர் நீதிக்கதைகள் - வலிமை! Reviewed by haru on August 04, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]