Ads Below The Title

பீர்பால் கதைகள் - ஏமாற்றாதே, ஏமாறாதே!

ஏமாற்றாதே, ஏமாறாதே!

கபாலிபுரம்என்ற மாநகரில் கபிலன் என்ற ஓவியன்இருந்தான். ஓவியம் வரைவதில் மிகுந்ததிறமை உடையவன். யாரைப் பார்த்தாலும் அவர்களைஅப்படியே ஓவியம் வரைந்து விடுவான். ஓவியத்திற்கும் அந்த ஆளுக்கும் சிறுவேறுபாடு கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு பொருத்தமாக ஓவியம்வரைவான்.

பணக்காரர்களைஓவியமாக வரைந்து கொடுப்பான். அந்தஓவியத்தை நல்ல விலை கொடுத்துவாங்குவர். அதைத் தங்கள் வீட்டில்அழகாக மாட்டி வைப்பர்.

அந்த ஊரில் ராஜன் என்றசெல்வன் இருந்தான். யாருக்கும் எதையும் தராத கருமிஅவன். அவனுடைய பிறந்த நாள்விழா வந்தது. நிறைய உறவினர்கள்விழாவிற்கு வந்திருந்தனர்.

ராஜனின்இயல்பை அறியாத கபிலன் அந்தவிழாவிற்குச் சென்றான். ராஜனை வணங்கிய அவன், “ஐயா! நான் சிறந்த ஓவியன். உங்களை அப்படியே ஓவியமாக வரைந்து தருகிறேன். உங்களையே நேரில் பார்ப்பது போலஇருக்கும். அதை வரவேற்பு அறையில்அழகாக மாட்டி வைக்கலாம். அந்தஓவியத்திற்கு எவ்வளவு பணம் தருவீர்கள்?'' என்று கேட்டான்.

"உறவினர்கள்தன்னைப் பெருமையாக நினைக்க வேண்டும். பிறகுபணம் தராமல் இவனை ஏமாற்றலாம்' என்று நினைத்தான் ராஜன்.

நீ வரையும் ஓவியம் என்னைப்போலவே இருக்க வேண்டும். அப்படிஇருந்தால் ஆயிரம் பணம் தருகிறேன். இல்லாவிட்டால் பணம் எதுவும் தரமாட்டேன்,'' என்றான்.

உங்களைப்போலவே ஓவியம் வரைந்து ஒருவாரத்தில் தருகிறேன். குறை ஏதும் இருந்தால்பணம் தர வேண்டாம்,'' என்றான்ஓவியன்.

ராஜனைப்போலவே ஓவியம் வரைந்து எடுத்துவந்தான். அந்த ஓவியத்தை மேலும்கீழும் பார்த்தான் ராஜன்.

இந்த ஓவியம் என்னைப் போலவாஇருக்கிறது? நீயே பார். இவ்வளவுநரையா என் தலையில் உள்ளது? என்னைக் கிழவனாக்கிவிட்டாயே... நான் இருப்பது போலஇளமையாக ஓவியத்தை வரைந்து கொண்டு வா,'' என்றான்.

அந்த ஓவியத்தை எடுத்துச் சென்றான் கபிலன். அதில் சிலமாற்றங்கள் செய்தான். அந்த ஓவியத்தை மீண்டும்ராஜனிடம் கொண்டு வந்தான்.

என்னைத்தானே ஓவியம் வரையச் சொன்னேன். நீ எவனோ ஓர் இளைஞனைவரைந்து உள்ளாயே... இளமையும் முதுமையும் கலந்தது போல உன்னால்வரைய முடியாதா?'' என்று கேட்டான்.

அந்த ஓவியத்தில் மேலும் சில மாற்றங்களைச்செய்தான் கபிலன்.

இந்த ஓவியமும் என்னைப்போல இல்லை. வேறு ஓவியம்வரைந்து கொண்டு வா,'' என்றான்ராஜன்.

"எப்படிவரைந்தாலும் இவன் ஓவியத்தை வாங்கப்போவது இல்லை. ஏதேனும் குறைசொல்லித் திருப்பி அனுப்பப் போகிறான். என்ன செய்வது?' என்றுசிந்தித்தான் கபிலன்.

பீர்பாலிடம்வந்து நடந்ததை சொன்னான், “அந்தச்செல்வன் ஓவியம் வாங்காமல் என்னைஏமாற்றுகிறான். என் உழைப்பிற்கு நீங்கள்தான்ஊதியம் வாங்கித் தர வேண்டும்,'' என்றுவேண்டினான்.

ராஜனை வரவழைத்தார் பீர்பால்.

ஏன் இந்த ஓவியனை ஏமாற்றநினைக்கிறீர். பலமுறை திருத்தம் செய்தும்ஓவியத்தை வாங்க மறுக்கிறீராமே?'' என்றுகேட்டார்.

அமைச்சரே! நான் யாரையும் ஏமாற்றவில்லை. என்னைப் போல ஓவியம்வரைந்து தா. ஆயிரம் பணம்தருகிறேன் என்று இவனிடம் சொன்னேன். இவன் வரைந்த ஓவியம் என்னைப்போல இல்லை. அதனால்தான் பணம்தரவில்லை. என்னைப் போலவே ஓவியம்வரைந்து தரச் சொல்லுங்கள். ஆயிரம்பணத்திற்குப் பதில் இரண்டாயிரமே தருகிறேன்,'' என்றான் ராஜன்.

ஓவியம்என்றாலே சிறு சிறு குறைகள்இருக்கத்தானே செய்யும். இது உங்களுக்குத் தெரியாதா?'' என்று கேட்டார் பீர்பால்.

அதெல்லாம்எனக்குத் தெரியாது. என்னைப் போலவே ஓவியம்வரைந்து தரச் சொல்லுங்கள். இரண்டுபங்கு பணம் தருகிறேன். குறைஇருந்தால் ஒரு பணமும் தரமாட்டேன்,'' என்று அடாவடியாகப் பேசினான் அவன்.

ஒரு வாரம் சென்று வாருங்கள். உங்களைப் போலவே ஓவியம் இங்குஇருக்கும். அதில் குறை இருந்தால்பணம் தரவேண்டாம்,'' என்றார் பீர்பால்.

"அந்தஓவியத்திலும் எப்படியும் குறை கண்டுபிடித்து பணம்தராமல் தப்பிக்கலாம்' என்று புறப்பட்டான் ராஜன்.

நீ ஓவியம் ஏதும் வரையவேண்டாம். அடுத்த வாரம் இங்குவா. பணத்துடன் செல்லலாம்,'' என்றார்.

ஒரு வாரம் சென்றது.

பீர்பாலின்மாளிகைக்கு ஓவியன் முதலில் வந்தான். பிறகு ராஜன் வந்தான்.

உங்களைப்போலவே வரையப்பட்ட ஓவியம் இது. திரைச்சீலையால் மூடப்பட்டுள்ளது. சீலையை விலக்கிப் பாருங்கள். சிறு குறையும் உங்களால் கண்டுபிடிக்க முடியாது,'' என்றார்.

"எப்படியும்வரைந்து இருக்கட்டும். குறை கண்டுபிடித்து விடலாம்' என்று திரையை விலக்கினான் அவன்.

அங்கே அவனைப் போலவே ஓவியம்இருந்தது. ஆனால், அந்த ஓவியம்அசைந்தது; கண்களை இமைத்தது.

"அதுஓவியம் அல்ல. எதிரே உள்ளவர்வடிவத்தை அப்படியே காட்டும் நிலைக்கண்ணாடி. அதில் தன் வடிவம்தெரிகிறது' என்பது அவனுக்குப் புரிந்தது.

அமைச்சரே! இது ஓவியம் அல்ல. முகம்பார்க்கும் கண்ணாடி,'' என்றான் அவன்.

கண்ணாடியில்தான்நம் வடிவம் அப்படியே தெரியும். குறை எதுவும் காணமுடியாது. ஓவியம்என்றால் குறைகள் இருக்கத்தான் செய்யும். இந்தக் கண்ணாடியை எடுத்துச் செல்லுங்கள். ஓவியனுக்கு இரண்டாயிரம் பணம் தாருங்கள்,'' என்றார்பீர்பால்.

அமைச்சரே! இது நியாயம் அல்ல!'' என்றான்அவன்.

நியாயத்தைப்பற்றி நீங்கள் பேசாதீர்கள். குறையேஇல்லாமல் யாராலும் ஓவியம் வரைய முடியாது. இதை அறிந்த நீங்கள் என்னசெய்தீர்கள்? இந்த ஓவியங்களை எத்தனைமுறை வரையச் சொன்னீர்கள்?

நம் வடிவம் கண்ணாடியில்தான் குறைஇன்றித் தெரியும். இரண்டாயிரம் பணம் தந்து இதைவாங்கிச் செல்லுங்கள். இல்லையேல் ஏமாற்ற முயன்றதற்குக் கடுமையானதண்டனை கிடைக்கும்,'' என்றார் பீர்பால்.

"ஆயிரம்பணம் கொடுத்து அந்த ஓவியத்தையே வாங்கிஇருக்கலாம். வீட்டில் அழகாக மாட்டி வைத்துஇருக்கலாம். எல்லாரும் பார்த்து மகிழ்ந்து இருப்பர். பத்துப் பணம் பெறாதகண்ணாடி இது. இதற்கு இரண்டாயிரம்பணம் தர வேண்டி வந்ததே"என்று தன்னையே நொந்து கொண்டான்அவன்.  


ஓவியனிடம் இரண்டாயிரம் பணம் தந்தான். அந்தக்கண்ணாடியை எடுத்துக் கொண்டு வருத்தத்துடன் சென்றான்பணக்காரன்.
பீர்பால் கதைகள் - ஏமாற்றாதே, ஏமாறாதே! பீர்பால் கதைகள் -  ஏமாற்றாதே, ஏமாறாதே! Reviewed by haru on August 27, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]