Ads Below The Title

சிறுவர் கதைகள் – முரட்டு சிங்கம்

முரட்டு சிங்கம்:-

ஒரு பெரிய மலைப் பிரதேசத்தில்செழித்தோங்கி வளர்ந்த அடர்ந்த காடு. அக்காட்டில் சிங்கம், புலி, கரடி போன்றபெரிய மிருகங்களும், மான், குரங்கு போன்றசிறிய மிருகங்களும் வாழ்ந்து வந்தன.  

காலம் காலமாகபல வகையான மிருகங்களும் ஒரேஇடத்தில் இருந்து வந்ததால் இவைஒற்றுமையாக காட்டில் வாழ்ந்து வந்தன. ஆனாலும், இக்காட்டிலுள்ளசிங்கங்களில் முரட்டுச் சுபாவமுள்ள சிங்கம் ஒன்று இருந்தது.  

அதனுடைய செயல்கள் மற்ற சிங்கங்களுக்குப் பிடிக்காததால்அது தனிமைப் படுத்தப்பட்டு தனிக்காட்டுராஜாவாக உலவி வந்தது.

இருப்பினும்காட்டிலுள்ள மான், குரங்கு ஆகியவற்றுடன்முரட்டுச் சிங்கம் நட்பாகவே பழகிவந்தது. அவையும் தனியாக வாழும்முரட்டுச் சிங்கத்தின் மீது பாசமாய் இருந்தன.  

இச்சிங்கம் காட்டில் உலாவச் செல்லும் போது, மான்களுடன்தான் செல்வது வழக்கம். நாட்கள்ஆக ஆக மான்களின் எண்ணிக்கைகுறைந்து கொண்டே வந்தது.

இதையறிந்தமற்ற மான்கள் முரட்டுச் சிங்கத்துடன்உலவச் சென்ற போது, திசைமாறி வேறு எங்கும் சென்றிருக்கலாம். அவை இடம் கண்டறிந்துமீண்டும் நம்மிடம் வந்து சேரும் எனநம்பிக் கொண்டிருந்தன.

ஒரு நாள் முரட்டுச் சிங்கம்காணாமல் போன மான் குட்டிஒன்றுடன் காட்டில் சுற்றித் திரிந்து கொண்டிருந்ததை மற்ற மான்கள் பார்த்தன. ஆனாலும், நீண்ட நாட்கள் ஆகியும்இவ்விரண்டும் தங்களுடைய இருப்பிடம் வந்து சேரவில்லை.

அதிர்ச்சியடைந்தமற்ற மான்கள் முரட்டுச் சிங்கத்தையும்குட்டி மானையும் தேட ஆரம்பித்தன. எங்குதேடியும் கண்ணில் படவில்லை. குட்டிமானின் தாய், சேயை இழந்தஏக்கத்தில் காட்டில் சுற்றித் திரிந்தது.

ஓர் அடர்ந்த புதர் பக்கத்தில்சிங்கம் கர்ஜிப்பதைப் போன்ற சப்தம் கேட்டது. உன்னிப்பாக அந்த திசை நோக்கிநடந்த தாய் மான் சேறும், சகதியுமாய் இருந்த படு குழியில்முதலை ஒன்றுடன் ஒரு சிங்கம் உயிருக்குப்போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்தது.  

இது நம்முடன் இருந்தமுரட்டுச் சிங்கம்தான் என அறிந்து, உரத்தகுரலில் சப்தமிட்டது. இந்த சப்தம் கேட்டு, காட்டிலுள்ள மற்ற மான்களும், குரங்குகளும், சிங்கங்களும் அங்கு படையெடுத்தன.

முரட்டுச்சிங்கம் முதலையுடன் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்த மான்கள் எப்படியாவதுஅதைக் காப்பாற்ற வேண்டுமென சிங்கங்களிடம் கூறின. ஆனால், சிங்கங்கள்அது தங்களுக்கு இழைத்த கொடுமைக்கு சாகட்டும்என சொல்லி விட்டுச் சென்றுவிட்டன.

ஆனால், குரங்குகள் அந்தச் சிங்கங்கள் சொன்னதைக்கேட்காமல் அதன் மீது இரக்கம்காட்டி காப்பாற்ற ஒரு திட்டத்தைத் தீட்டிமான்களிடம் கூறின.

அத்திட்டத்தின்படி, வளர்ந்த மரங்களில் படர்ந்திருக்கும் கொடிகளை பிடுங்கி நாங்கள்கீழே போடுகிறோம். அதைக் கொண்டு நீங்கள்முரட்டுச் சிங்கத்தைக் காப்பாற்றி விடலாம் என யோசனைக்கூறின.

இதுவும்நல்ல யோசனைதான் என அறிந்த மான்கள், குரங்குகள் மரத்திலிருந்து பிடுங்கிப் போட்ட கொடி ஒன்றைஎடுத்துச் சென்று சிங்கம் விழுந்திருந்தகுழியில் போட்டு, "ஏய்.... சிங்கமே நீஇதை உன் வாயால் கவ்விப்பிடித்துக் கொள். நாங்கள் உன்னைமேலே தூக்கி காப்பாற்றி விடுகிறோம்"எனக் கூறின.

அவ்வாறே, முரட்டுச் சிங்கமும் கொடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டுஏறி பாதி குழி வரும்போது, கொடி அறுந்து மீண்டும்குழிக்குள் விழுந்துவிட்டது.

இதை மரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த குரங்குகள் ஏராளமான கொடிகளைப் பிடுங்கிஒன்றாகக் கயிறு போல் திரித்துகீழே போட்டன. மான்கள் அதைசுருட்டிக் கொண்டு போய் மீண்டும்குழிக்குள் போட்டன. முரட்டுச் சிங்கம்அந்தப் பலமான கொடியைப் பிடித்துக்கொண்டு தப்பித்தோம், பிழைத்தோம் என கூறிக் கொண்டுமேலே வந்து சேர்ந்தது.

தன்னை முதலையிடமிருந்து காப்பாற்றி உயிர் பிச்சை வழங்கியகுரங்கு களுக்கும், மான்களுக்கும் கண்ணீர் மல்க நன்றிகூறியது! நாம் நயவஞ்சமாகப் பழகிமான் இனத்தை வேட்டையாடிப் புசித்தும், தன்னைப் பழி வாங்காமல் காப்பாற்றியசெயல் கண்டு அவற்றிடம் மன்னிப்புகேட்டது.

தன் உயிர் உள்ளவரை தன்பலத்தை வைத்துக் கொண்டு எல்லா உயிர்களுக்கும் தன்னாலான உதவி செய்வேனே ஒழிய, தொந்தரவு செய்யமாட்டேன் எனவும், அன்றிலிருந்து தனக்குஏற்பட்ட துன்பம் ஒரு பாடம்எனக் கருதி மற்ற சிங்கங்களுடன்திருந்தி வாழவும் முடிவு செய்ததுமுரட்டுச் சிங்கம்.
சிறுவர் கதைகள் – முரட்டு சிங்கம் சிறுவர் கதைகள் – முரட்டு சிங்கம் Reviewed by haru on August 21, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]