Ads Below The Title

சிறுவர் நீதிக்கதைகள் – சுயபுத்தி!

சுயபுத்தி!

ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையைவிற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர்இவர்களைப் பார்த்து, "பாரேன், இவர்களை, அற்புதமானகழுதையை ஓட்டிக் கொண்டு நடந்துசென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச்செல்லலாம். ஆனால் பொருளைக் கொடுத்தகடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக்கொடுக்கவில்லை, இவர்களுக்கு" என்று ஏளனம் செய்தனர்.

இதனால்வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும்ஒரு முடிவு செய்து, வயதில்சிறியவனான மகன் கழுதையின் மேல்உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறேஇருவருமாகப் போனார்கள். அப்போது வேறு சிலவழிப்போக்கர்கள், "இங்கப் பாருடா அநியாயம்! பெரியவர் நடக்கமுடியாமல் நடக்கிறார், இந்த வாலிபப் பையன்சொகுசா கழுதை சவாரி செய்கிறான்" என்று கிண்டலடித்தனர்.

இதைக் கேட்டு இவர்கள் கூறுவதில்நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக்கழுதையில் உட்காரவைத்து இருவரும் புறப்பட்டனர். இன்னும் சற்று தூரம்சென்ற பின் ஒரு வழிப்போக்கன்இவர்களைப் பார்த்து "கலி முற்றிவிட்டது... இங்கப்பாரு! நல்லா சுக்குமாந்தடி போலஇருக்கிற பெரியவர், ஒரு நோஞ்சான் பையனைநடக்கவிட்டு தான் மட்டும் சொகுசாககழுதை மேல் ஏறிப்போகிறார்" என்றான்.

வழக்கம்போல இதைக்கேட்ட தந்தை-மகன் இருவரும்ஒரு சேர கழுதைமேல் ஏறிகொண்டனர். இனி இந்த உலகம் தங்களைப்பார்த்துக் கேலிப் பேசாது என்றுதந்தைக் கூறினார்.

கொஞ்ச தூரம் சென்றபின் இன்னொருவழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "இரண்டு தடியன்கள், ஒருநோஞ்சான் கழுதையின் மேல் ஏறி சவாரிசெய்கிறார்கள்; கொடுமைக்கார ஜென்மங்கள்!" என்று காட்டமாக விமர்சித்தான்.

இதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும் கழுதையிலிருந்து குதித்தனர். இனி என்ன செய்வது? என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு"மக்கள் மனம் மகிழ கழுதையைநாம் கட்டித் தோளில் சுமந்துசெல்வோம்!" என்று முடிவு செய்தனர்.

அவ்வாறுகழுதையைத் தோளில் சுமந்து செல்கையில்வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய்வெள்ளத்தில் விழுந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்தமுடியவில்லை! எனவே அது ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தந்தையும் மகனும் செய்வதறியாது திகைத்துநின்றனர்.

நீதி : மற்றவர்களைப் பற்றி கவலைபடாமல் நமக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை தைரியமாக செய்ய வேண்டும். சொல் புத்தியைவிட சுயபுத்தி மிக அவசியம்.
சிறுவர் நீதிக்கதைகள் – சுயபுத்தி! சிறுவர் நீதிக்கதைகள் – சுயபுத்தி! Reviewed by haru on August 18, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]