Ads Below The Title

சிறுவர் கதைகள் - சிங்கம் – அசிங்கம்

சிங்கம் – அசிங்கம்

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்துவந்தது. அதனுடைய மனைவி நோய்வாய்ப்பட்டுஇறந்து விட்டது. அதனால் அது மிகவும்கவலையுடன் காணப்பட்டது. சிங்கத்திடம் நரி, புலி, கரடி, சிறுத்தை போன்ற மிருகங்கள்வந்து துக்கம் விசாரித்து சென்றன.  

சிங்கம் முன்போல் காட்டில்அதிகமாக நடமாடாமல் தன்னுடைய உணவிற்காக மட்டும்வெளியே செல்லும். மற்றபடி தன்னுடைய குகையிலேயே இருக்கும். எப்பொழுதும் அது தன்னுடைய மனைவியைப் பற்றியேநினைத்துக் கொண்டிருந்தது.

இப்படியேநாட்கள் பல ஆகிவிட்டன.
சிங்கத்தின்நடமாட்டம் அதிகமாக இல்லாததால் ஒருநாள்புலியும், நரியும் சிங்கத்தை காணச்சென்றன. சிங்கம் மிகவும்சோர்ந்து போய் வேட்டைக்குகூடச்செல்லாமல் கண்ணீருடன் காணப்பட்டது.

புலியும், நரியும் சிங்கத்திடம், "இன்னும்அழுது கொண்டிருந்தால் என்ன பயன் அதனால் மனதை திடப்படுத்திக் கொண்டுவாழ பழகி கொள்ளவேண்டும்'' என்றன.

அதற்குசிங்கம் என்னுடைய மனைவிஇல்லாமல் என்னுடைய பலம் அனைத்தையும்நான் இழந்து விட்டேன். என்னுடைய மனைவி தான் நான்வேட்டைக்குச் செல்லும் போது உற்சாகமும், ஊக்கமும் கொடுத்து வழியனுப்புவாள். அதனால் அவள் இல்லாமல்என்னால் வேட்டைக்கு செல்ல மனமே இல்லைசாப்பிடவும் பிடிக்க வில்லை என்றது.

புலியும், நரியும் சிங்கத்திடம் சிறிதுநேரம் பேசி விட்டு குகையைவிட்டு வெளியே வந்து தங்களுடைய இருப்பிடம் நோக்கிச் சென்றன.

நரி தன்னுடைய இருப் பிடத்திற்கு செல்லும்வழி யில் கரடி, சிறுத்தை, ஓநாய் முதலிய மிருகங்களைச் சந்தித்தது. நரி அந்த மிருகங்களிடம்சிங்கம் அது தன்னுடைய முழுபலத்தையும் இழந்து விட்டதுஎன்று அதன் வாயாலேயே சொன்னது என்றும் வேண்டுமானால்புலியிடம் கேட்டுப் பாருங்கள் என்றது.

புலியும்தற்செயலாக அவ்வழியே வந்தது. கரடி, சிறுத்தை, ஓநாய் ஆகியோர் புலியிடம் நரிசொல்வது உண்மையா என்று கேட்டன. புலியும் அதற்கு ஆமாம் தானும்நரியும் சிங்கத்தை சந்திப்பதற்காக சென்ற போது சிங்கம்அதன் வாயாலேயே தன்னுடையமனைவி இறந்த பின் தன்னுடையபலம் அனைத்தையும் இழந்து விட்டதாக சொன்னது என்று புலி மற்றமிருகங்களிடம் கூறியது.

இதைக்கேட்ட உடன் மற்றமிருகங்களுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. ஏனென்றால் சிங்கத்தின் பலத்தை வைத்துதான்காட்டில் உள்ள மற்ற மிருகங்கள் அதற்கு பயந்து மரியாதைக்கொடுத்தன. ஆனால் சிங்கமே தன்னுடைய பலம் அனைத்தையும் தான்இழந்து விட்டதாக ஒப்புக்கொண்டதால் தாங்கள் இனி சிங்கத்திற்கு பயப்பட வேண்டாம் என்று புலி, கரடி, நரி, சிறுத்தை, ஓநாய் முதலான மிருகங்கள்தங்களுக்குள் பேசி முடிவெடுத்தன.

நான்குநாட்கள் கழித்து புலி, கரடி, நரி, சிறுத்தை, ஓநாய் முதலிய மிருகங்கள்சிங்கம் அதன் குகைக்கு செல்லும்வழியில் உள்ள ஒரு மரத்தடியில்நின்று பேசிக் கொண்டிருந்தன.  

அப்பொழுது அவ்வழியே சிங்கம்வந்தது. சிங்கம் அமைதியாக அவ்வழியே அவர்களை கடந்து செல்கையில்புலியும், நரியும் தாங்கள் இனியாரும் சிங்கத்திற்கு பயப்படமாட்டோம் என்று அதன்காதில் விழு மாறு சற்றுசத்த மாகவே சொன்னார்கள்.

சிங்கம்அதைக் கேட்டு ஒன்றும் சொல்லாமல்அமைதியாக சென்று விட்டது.

புலியும், நரியும் இப்படி சொல்லியும் சிங்கம்அமைதியாக சென்றதால் சிங்கம்உண்மையிலேயே தன்னுடைய பலத்தைஇழந்து விட்டது என்றும்அது பயந்து தான் அமைதியாகசெல்கிறது என்றும் தங்களுக்குள் பேசிக் கொண்டன.

சிங்கத்தைஅடிக்கடி புலி, நரி, கரடி, சிறுத்தை, ஓநாய் முதலிய மிருகங்கள்கேலி செய்து வந்தன. சிங்கமும்அமைதியாக அவர்களின் பேச்சை காதில் வாங்காமல்சென்று விடும்.

ஒருநாள்சிங்கம் வேட்டைக்குச் சென்றுஒரு மானைக் கொன்று அதைத்தன்னுடைய வாயில் கவ்விக் கொண்டுகுகையை நோக்கி வந்து கொண்டிருந்தது. சிங்கம் வழக்கம் போல்குகைக்கு செல்லும் வழியில் நரி, புலி, கரடி, சிறுத்தை, ஓநாய் முதலிய மிருகங்கள்நின்று கொண்டிருந்தன.

சிங்கம்தூரத்தில் இருந்தே அவர்களை பார்த்துவிட்டபடியால் அமைதியாக நடந்து வந்தது. நரி மற்ற மிருகங்களிடம் தான்சிங்கத்தின் வாயில் கவ்விக் கொண்டிருக்கும் மானை பறித்து வருவதாககூறி சிங்கம் வரும் வழியில்குறுக்கே சென்று நின்றது.

சிங்கமும்நரியின் அருகே வந்துவிட்டது.

நரி சிங்கத்திடம் சிங்கத்தின் வாயில் உள்ள மானைதன்னிடம் கொடுத்து விட்டு திரும்பிப் பார்க்காமல்ஓடிவிடுமாறு கூறியது. இல்லாவிட்டால் தான் சிங்கத்தை அடித்தேகொன்று விடுவ தாக மிரட்டியது. சிங்கத்தின் வாயில் கவ்விக் கொண்டிருக்கும்மானை பிடித்து இழுத்தது.  

சிங்கம் ஏற்கனவே பசியில்வேறு இருந்தது. தான் கஷ்டப்பட்டுவேட்டையாடி விட்டு தனக்காக கொண்டுவரும் இரையை மற்றொருவர் அபகரிக்க நினைப்பதால் அது இவ்வளவு நாட்கள்காத்த தன்னுடைய பொறுமையைஇழந்து விட்டது.

கவ்வியிருந்த மானை கீழே வைத்துவிட்டு மிகக்கடுமையான கோபத்துடன் நரியை பிடித்து இழுத்துஅதை இரண்டே அடியில் அதனுடையஉடலை இரண்டாக கிழித்து எறிந்துவிட்டது.

இவற்றைஎல்லாம் மரத்தடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தபுலி, ஓநாய், கரடி, சிறுத்தைஆகியோர் அங்கிருந்து நாங்கள் தப்பித்தோம் பிழைத்தோம்என்று ஓடி மறைந்து விட்டனர்.

சிங்கம்மானை தன்னுடைய வாயில் கவ்வி தன்னுடையகுகையை நோக்கி கம்பீரமாக நடந்துசென்றது. சிங்கம் சொன்னதை தவறாகஎடுத்துக் கொண்ட நரிசிங்கத்திடம் வாலாட்டி தன்னுடைய முடிவை தானே தேடிக்கொண்டது.  

நரிக்கும் மற்ற மிருகங்களுக்கும் தெரியாமல்போய் விட்டது, சிங்கத்தின் வீரமும் பலமும் எப்பொழுதும்அதை விட்டுப் போகாதென்று.

சிறுவர் கதைகள் - சிங்கம் – அசிங்கம் சிறுவர் கதைகள் - சிங்கம் – அசிங்கம் Reviewed by haru on September 10, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]