Ads Below The Title

சிறுவர் கதைகள் - மொட்டை தலை!

மொட்டை தலை!

ஒரு ஊரில் அரசன் ஒருவன்இருந்தான். அவனுக்கு எதை யாரிடம் கேட்கவேண்டும் என்ற விவஸ்தை கிடையாது. இடம், பொருள், ஏவல் என்றுஎதுவும் தெரியாமல் கண்ணில் பட்டோரிடம் கண்டதையும்கேட்டு விடுவான். அதனால் அவனை, "வெகுளிஅரசன்' என்றே பலரும் கருதினர். அந்த மாதிரிதான் அவரும் நடந்து கொள்வார்.

ஒரு சமயம், அந்த அரசனுக்குமுழங்காலில் வலி ஏற்பட்டது. உடனேமந்திரியை அழைத்தான்.

அமைச்சரே, எனது முழங்காலில் வலிஏற்பட்டுள்ளது. அப்படியும் இப்படியும் காலை அசைக்க முடியவில்லை. என்ன செய்யலாம்?'' என்றுஆலோசனை கேட்டான்.

மந்திரி ஒரு கணம் தீவிரமாகயோசித்தான்.

எந்த ஒரு விஷயமானாலும் அதுசிறிதாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும்சரி, நம் அரண்மனை குருவிடம்கேட்டுத்தானே செய்கிறோம். அதனால் அந்த முழங்கால்வலி பற்றியும் அவரிடம் கேட்கலாம். அவர்என்ன சொல்கிறாரோ? அதன்படி செய்வதே நல்லது,'' என்றார் அமைச்சர்.

அமைச்சர் சொல்வது சரியென அரசனுக்குப்பட்டது. அதனால் அவர், அரண்மனைகுருவை அழைத்து வரும்படி தனதுசேவகர்களுக்கு உத்தரவிட்டான். அரச குருவை அழைத்துவரச் சேவகர்கள் உடனே புறப்பட்டனர்.

சிறிது நேரத்தில் அரச குரு அங்குவந்து சேர்ந்தார்.

என்னை அழைத்த காரணம் என்னவோ, நான் தெரிந்து கொள்ளலாமா?'' எனக் குரு, அரசனைப்பார்த்து கேட்டார்.

குருவே! எனது முழங்காலில் வலிஉண்டாகியுள்ளது. அதைப் போக்க வழிஏதேனும் சொல்லுங்கள்,'' என்று குருவைப் பார்த்துகேட்டார் அரசன்.

அரசே! அரண்மனை வைத்தியரைக் கேட்டால்தான்நல்ல வழி தெரியும். இருந்தாலும்நான் கேள்விப்பட்ட ஒரு செய்தியைச் சொல்கிறேன். பொடுதலையை வச்சுக்கட்டினா முழங்கால் வலி நீங்கி விடும்,'' என்று கூறி விட்டு, குருநாதர்அரசனிடமிருந்து விடைபெற்றுச் சென்று விட்டார்.

உடனே அரண்மனை வைத்தியரை அழைத்துவரும்படி சேவகர்களை அனுப்பி வைத்தான் அரசன். சேவகர்களும் அரண்மனை வைத்தியரின் வீட்டைநோக்கிப் புறப்பட்டனர்.

அரசனுக்கு முழங்கால் தாங்க முடியாத அளவுக்குவலித்தது. அரண்மனை வைத்தியர் வரும்வரை வலியைத் தாங்க முடியாமல்துடித்தான். அப்போது அங்கே பண்டிதன்ஒருவன் வந்தான்.

குருநாதர் சொன்னபடி பொடுதலை வைத்துக் கட்டவேண்டும்!'' என்று அவரிடம் கேட்டான்அரசன்.

அந்த பண்டிதனுக்குத் தமிழே அரைகுறை, வைத்தியம்என்றால் என்னவென்றே தெரியாது.

"பொடுதலை' என்றவுடன் தனது கையில் இருந்தஅகராதியைப் பிரித்து பொடுதலைக்குப் பொருள் கண்டறிந்தார்.

பின்னர், பண்டிதன் அரசனைப் பார்த்து, “அரசே! பொடுதலை என்றால் முடியில்லாத தலை, என அகராதியில் குறிப்பிடப் பட்டுள்ளது,'' என்று கூறினான்.

பண்டிதன் கூறியதைக் கேட்ட அரசன் உடனேகாவலர்களை அழைத்து, “யாராவது தலையில் முடியில்லாமல்சென்றால் உடனே பிடித்துக் கொண்டுவாருங்கள்,'' என ஆணை பிறப்பித்தான்.

அரசனின் ஆணையைச் சிரமேற்கொண்டு காவலர்கள்சாலையில் சுற்றும் முற்றும் பார்த்தனர். அப்போது அந்த வழியாகமொட்டைத் தலையன் ஒருவன் சென்றுகொண்டிருந்தான். உடனே காவலர்கள் அவனைப்பிடித்துச் சென்று அரசனின் முன்நிறுத்தினர்.

அரசனும், “சரி....சரி.... உடனேநம் குருநாதர் சொன்னபடி செய்யுங்கள்,'' என்று கட்டளையிட்டார்.

வந்திருந்த மொட்டைத்தலை ஆசாமிக்கு எதுவுமே விளங்கவில்லை. "குருநாதர்என்ன சொன்னார்? அரசன் நம்மைப் பிடித்துவரும்படி ஏன் கட்டளையிட்டார்? நம்மைஎன்ன செய்யப் போகிறார்கள்?' என்றகேள்விகள் மொட்டைத் தலையனின் உள்ளத்தில் எழுந்து அவனைக் குழப்பம்அடையச் செய்தன.

உம்... சீக்கிரம் அவன் தலையை எடுத்துக்கொண்டு வாருங்கள்,'' என்று அரசர் கோபமாகக்கூறினான். அப்போது அரண்மனை வைத்தியர்மருந்துடன் அங்கே வந்துவிட்டார். அரசனின்காலுக்கு மருந்தை வைத்து நன்றாககட்டிவிட்டார்.

பிறகு அரசனிடம்அரசே! இந்த மொட்டைத்தலையனின் தலையை வெட்டிக் கொண்டுவரும்படி ஏன் கட்டளையிட்டீர்கள்?'' என்று கேட்டார்வைத்தியர்.

வைத்தியரே, உங்களை அழைத்து வரும்படிகாவலர்களை அனுப்புவதற்கு முன், அரண்மனை குருநாதரிடம்ஆலோசனை கேட்டேன். அவர் பொடுதலை வச்சுக்கட்டினா முழங்கால் வலி சரியாகப் போய்விடும்என்று கூறினார். மேலும், எதற்கும் வைத்தியரிடம்ஒரு வார்த்தை கேட்டுவிடுங்கள் என்று குருநாதர் சொல்லிவிட்டுச்சென்று விட்டார். அதன் பிறகுதான் உங்களுக்குஆள் அனுப்பினேன். நீங்கள் வருவதற்குச் சற்றுதாமதம் ஆனதால் என்ன செய்வதென்றுயோசனை செய்தேன்,'' என்று கூறி அரசன்தன் பேச்சைப் பாதியில் நிறுத்தினான்.

அப்புறம் என்ன நடந்தது அரசே?'' என்று கேட்டார் வைத்தியர்.

அப்புறம்... அங்கிருந்த அரைகுறைப் பண்டிதனிடம், "பொடுதலை' என்றால் என்ன என்றுகேட்டேன். அதற்கு அவர் தனதுகையில் இருந்த அகராதியைப் பார்த்து, அரசே, பொடுதலை என்றால் முடியில்லாததலை என்று அர்த்தம் எனகூறினான். அவன் கூறியபடியே ஒருமொட்டைத் தலையனைக் கண்டுபிடித்து அவனது தலையை வெட்டி, அதனை எனது முழங்காலில் கட்டினால்முழங்கால் வலி போய்விடும் என்றுஎண்ணி இவ்வாறு செய்தேன்,'' என்றுவிளக்கமாகக் கூறினான் அரசன்.

அரசன் இவ்வாறு கூறியதைக் கேட்டவைத்தியர் கலகலவெனச் சிரித்தார்.
வைத்தியரே, ஏன் சிரிக்கிறீர்கள்?'' என்றுகேட்டார் அரசன்.

அரசே! பொடுதலை என்றால் ஒருசக்தி வாய்ந்த மூலிகை இலை. அதை நசுக்கி முழங்காலில் வைத்துக்கட்டினால் வலி நீங்கிவிடும்,'' என்றுகூறினார் வைத்தியர்.

இதைக் கேட்ட அரசன் பேந்தப்பேந்த விழித்தான். ஆனால், மொட்டைத் தலையனோவைத்தியரைப் பார்த்து, “ஐயா, சரியான நேரத்தில்வந்து என் உயிரை காப்பாற்றினீர்கள். நீங்கள் மட்டும் வரவில்லை என்றால், இந்நேரம் என் தலையை வெட்டி, கசக்கி அரசனின் முழங்காலில் வைத்துக்கட்டியிருப்பார்கள். நல்லவேளை, என் உயிர் தப்பியது,'' என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

அதிலிருந்துதான், “மொட்டைத் தலைக்கும் முழுங்காலுக்கும் முடிச்சுப் போடாதேஎன்ற பழமொழிஉருவானது குட்டீஸ்!

நன்றி தினமலர்!
 


சிறுவர் கதைகள் - மொட்டை தலை! சிறுவர் கதைகள் - மொட்டை தலை! Reviewed by haru on September 16, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]