Ads Below The Title

சிறுவர் கதைகள் - நிறைய கொடு!


நிறைய கொடு!


அரியலூர்என்னும் ஊரில் தனசேகர் என்பவர்வாழ்ந்து வந்தார். அவர் தன் வீட்டுக்குதேவையான பொருட்களை வாங்க சந்தைக்கு சென்றார். அவர் போகும் வழியில் ஓரிடத்தில்கூட்டம் கூடியிருந்தது.

என்னவென்று அறிவதற்காக அந்தக் கூட்டத்திற்குள் நுழைந்தார்.

அங்கே கழுதைகளுடன் வணிகன் ஒருவன் நின்றிருந்தான். அவனுக்கும், சிறுவன் ஒருவனுக்கும் வாக்குவாதம்நடந்து கொண்டிருந்தது.

வணிகனைப் பார்த்து தனசேகர், “உங்களுக்குள் என்ன தகராறு?'' என்றுகேட்டார்.

ஐயா! நான் வெளியூர். பத்துக்கழுதைகளின் மேல் வெல்லத்தை ஏற்றிக்கொண்டு இந்த ஊர் சந்தைக்குவந்தேன். இங்கே வரும் போதுஎன் கழுதைகளில் ஒன்று துள்ளிக் குதித்தது. அதன் முதுகில் இருந்த மூட்டை கீழேவிழுந்து விட்டது. அந்த மூட்டை மிகுந்தஎடையுள்ளதாக இருந்தது. என் ஒருவனால் அதைத்தூக்க முடியவில்லை.

அப்போது இந்தச் சிறுவன் அங்குவந்தான். அவனை அழைத்த நான், "தம்பி! இந்த மூட்டையைக் கழுதையின்மேல் ஏற்ற உதவி செய். உனக்கு நிறைய வெல்லம் தருகிறேன். நீ மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம்' என்றேன். இவனும் என்னுடன் சேர்ந்துமூட்டையைத் தூக்கி கழுதையின் முதுகில்மூட்டையை ஏற்றினான்.

நான் சொன்னது போலவே, கைநிறைய வெல்லத்தை எடுத்து இவனிடம் தந்தேன். ஆனாலும் இவன், "நீங்கள் நிறைய வெல்லம்தருவதாகச் சொன்னீர்கள். சொன்னது போல நடந்துகொள்ளவில்லை. குறைவான அளவு வெல்லமேதருகிறீர்கள். நான் பெற்றுக் கொள்ளமாட்டேன்' என்று மறுத்தான்.


நான் முதலில் எடுத்ததைப் போலஇன்னொரு பங்கு வெல்லம் எடுத்துநிறைய வெல்லம் இது. பெற்றுக்கொள் என்று தந்தேன்.

இதுவும் குறைவாகத்தான் இருக்கிறது. நீங்கள் நிறைய வெல்லம்தந்தால்தான் வாங்கிக் கொள்வேன் என்று மறுத்தான்.

மேலும், சிறிதளவு வெல்லத்தைச் சேர்த்து இவனிடம் தந்தேன்.

"இதுவும் நிறைய இல்லை' என்றுவாங்க மறுத்தான். எனக்கு என்ன செய்வதுஎன்று தெரியவில்லை. இவனோ, "நிறைய வெல்லம் கொடு. நிறைய வெல்லம் கொடு' என்றுஅடம் பிடிக்கிறான். அதற்குள் இங்கே கூட்டம் கூடிவிட்டது.

கூட்டத்தில் உள்ளவர்களுக்கும் என்ன செய்வது என்றுதெரியவில்லை. வேடிக்கை பார்த்தபடி நிற்கின்றனர்,'' என்றான்.

அந்தச் சிறுவன் குறும்பு செய்துவிளையாடுகிறான் என்பது தனசேகருக்கு புரிந்தது.

வணிகனிடமிருந்து வெல்லத்தை வாங்கினார் தனசேகர்.

தன் ஒரு கையில் சிறிதளவுவெல்லத்தை வைத்தார். இன்னொரு கையில் இன்னும்அதிகமாக வெல்லத்தை வைத்தார்.

இரண்டு கைகளையும் அந்தச் சிறுவனின் முன்நீட்டினார்.

எந்தக் கையில் எவ்வளவு வெல்லம்உள்ளது? உன்னால் சொல்ல முடியுமா?'' என்று கேட்டார்.

இந்த கையில் வெல்லம் குறைவாகஉள்ளது. அந்த கையில் வெல்லம்நிறைய உள்ளது,'' என்றான் சிறுவன்.

எந்த கையில் நிறைய வெல்லம்உள்ளது?'' என்று கேட்டார் தனசேகர்.

நிறைய வெல்லம் இருந்த கையைக்காட்டினான் சிறுவன்.

இந்தக் கையில் நிறைய வெல்லம்உள்ளது என்று நீயே ஒப்புக்கொண்டாய். இதை வாங்கிக் கொண்டுபோ. இனி வீணாக இங்கேதகராறு செய்யாதே,'' என்ற அவர் அதைச்சிறுவனிடம் நீட்டினார்.

வேறு வழியில்லாத அந்தச் சிறுவன் வெல்லத்தைஎடுத்துக் கொண்டான். ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றான்.

நன்றி தினமலர்!

சிறுவர் கதைகள் - நிறைய கொடு! சிறுவர் கதைகள் - நிறைய கொடு! Reviewed by haru on September 16, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]