Ads Below The Title

சிறுவர் கதைகள் - உங்க பேரைச் சொல்லி...

உங்க பேரைச் சொல்லி...
கந்தசாமிஎன்பவர் வேலை தேடி அடுத்தஊருக்குச் சென்றார். அங்கே சிலர் வருத்தத்துடன்இருப்பதைப் பார்த்தார்.


உங்களுக்குஎன்ன துன்பம் நேர்ந்தது? ஏன்இப்படி வருத்தமாக இருக்கிறீர்கள்?'' என்று அன்புடன் கேட்டார்.

இந்த ஊர் பண்ணையார் கொடுமைக்காரராகஇருக்கிறார். எங்களிடம் அதிக வேலை வாங்குகிறார். கூலியும் சரியாக தருவது இல்லை. அவரை எதிர்க்க எங்களுக்குத் துணிவு இல்லை. நாங்கள்பசியாலும், பட்டினியாலும் வாடுகிறோம்,'' என்றனர்.

அவர்கள்துன்பத்தைப் போக்க வேண்டும், அந்தப்பண்ணையாருக்கு நல்ல பாடம் கற்றுத்தர வேண்டும் என்று நினைத்தார் கந்தசாமி.

அந்த பண்ணையார் எப்படிப்பட்டவர்? அவரைப் பற்றிச் சொல்லுங்கள்,'' என்று கேட்டார்.

அவர் சண்டைச் சேவல்கள் வைத்திருக்கிறார். எங்கே சேவல் சண்டை நடந்தாலும்அதில் அவர் கலந்து கொள்வார்,'' என்றான் அவர்களில் ஒருவன்.

இந்தச்செய்தி எனக்குப் போதும். நான் சொல்வதுபோலச் செய்யுங்கள்உங்கள் துன்பத்தை நான்தீர்த்து வைக்கிறேன்,'' என்றார் கந்தசாமி.

நீங்கள்எது சொன்னாலும் நாங்கள் கேட்கிறோம்,'' என்றனர்.

எனக்குஒரு சண்டைச் சேவலும், இருநூறுபணமும் தேவை,'' என்றார்.
தன் திட்டத்தை அவர்களிடம் சொன்னார்.


உடனே அவர்கள் அனைவரும் சேர்ந்து, இருநூறு பணம் திரட்டினர். ஒருசண்டைச் சேவலையும் அவரிடம் தந்தனர்.

அவர்களில்நால்வரை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டார் கந்தசாமி.

பண்ணையாரின்வீட்டிற்குச் சென்றார். அவர் கையில் சண்டைச்சேவல் இருந்தது.

பண்ணையாரைவணங்கிய அவர், “ஐயா! சேவல்சண்டை என்றாலே உங்கள் பெயர்எங்கும் பரவி உள்ளது. நேற்றுஎங்கள் ஊரில் சேவல் சண்டைநடந்தது.

அதில்உங்கள் பெயரைச் சொல்லி, இந்தச்சேவலை சண்டைக்கு விட்டேன். இந்தச் சேவல் வெற்றிபெற்று விட்டது. பரிசுப் பணமாக நூறுபணம் கிடைத்தது. உங்களால் கிடைத்த பரிசுப் பணம்இது. உங்களிடம் பணத்தைத் தர வந்தேன்,'' என்றார்.

பணத்தைஅவரிடம் நீட்டினார்.

பணத்தைப்பெற்றுக் கொண்டார் பண்ணையார்.

உன் சண்டைச் சேவல் நன்றாகஉள்ளது. நல்ல பயற்சியும் தந்துள்ளாய். என் பெயரைச் சொல்லிப் போட்டியில்கலந்து கொள். மேலும், மேலும்உனக்கு வெற்றி கிடைக்கும்,'' என்றுபாராட்டினார்.

அடுத்தவாரம் மீண்டும் அங்கு வந்தார் கந்தசாமி.

அவருடன்அந்த ஊரைச் சேர்ந்த வேறுநான்கு பேர் வந்திருந்தனர்.

பண்ணையாரைவணங்கிய அவர், “உங்கள் பெயரைச்சொல்லி நேற்றும் சேவல் சண்டையில் கலந்துகொண்டேன். எனக்கே வெற்றி கிடைத்தது. பரிசாகக் கிடைத்த நூறு பணத்தைப்பெற்றுக் கொள்ளுங்கள்,'' என்று தந்தார்.

அவர் சூழ்ச்சியை பண்ணையார் அறியவில்லை. அந்தப் பணத்தையும் மகிழ்ச்சியுடன்பெற்றுக் கொண்டார்.

அடுத்தவாரம் கந்தசாமி நான்கு பேருடன் பண்ணையாரிடம்வந்தார்.
அவர் கையில் சண்டைச் சேவல்இல்லை.

இதை பார்த்த பண்ணையார், “என்னவெறுங்கையுடன் வந்திருக்கிறாய்? சண்டைச் சேவல் எங்கே?'' என்று கேட்டார்.

நேற்றுநடந்த போட்டியில் என் சண்டைச் சேவல்தோற்று இறந்துவிட்டது. கண்டிப்பாக அது வெற்றி பெறும்என்று நம்பினேன். அதனால் இவர்கள் ஒவ்வொருவரிடமும்நூறு பொற்காசு பந்தயம் வைத்தேன்.

இதுவரைவெற்றி பெற்றுக் கிடைத்த பணத்தை உங்களிடம்தான்தந்தேன். இப்போது தோற்று விட்டேன். இவர்களுக்கு நீங்கள்தான் பொற்காசுகளைத் தர வேண்டும்,'' என்றார்கந்தசாமி.

நீ தோற்றதற்கு நான் எதற்கு பொற்காசுகள்தர வேண்டும்? என்ன விளையாடுகிறாயா?'' என்றுகோபத்துடன் கத்தினார் பண்ணையார்.

சேவல்வெற்றி பெற்ற போது நீங்கள்எப்படிப் பணத்தைப் பெற்றுக் கொண்டீர்கள். இதேபோலச் சொல்லி அப்போது நீங்கள்மறுத்து இருக்க வேண்டாமா?

வெற்றிபெற்றால் பணம் உங்களுக்கு. தோல்விஅடைந்தால் இழப்பு எனக்கா? இதுஎன்ன நியாயம்? நீங்கள் பணத்தைப் பெற்றதற்குஇந்த ஊரில் நிறைய சாட்சிகள்இருக்கின்றன. மரியாதையாக இவர்கள் நால்வருக்கும் ஆளுக்குநூறு பொற்காசுகள் தாருங்கள். இல்லை என்றால் ஊரைக்கூட்டி, உங்களை அவமானப்படுத்துவேன். உங்களிடமிருந்து, கட்டாயப்படுத்தி அந்த பொற்காசுகளை வாங்குவேன்,'' என்றார் கந்தசாமி.

அப்போதுதான்பண்ணையாருக்கு அவரின் சூழ்ச்சி புரிந்தது. ஊர் மக்களிடம் தன் பேச்சு எடுபடாதுஎன்பதையும் அறிந்து கொண்டார்.

வேறு வழியில்லாத அவர், நானூறு பொற்காசுகளைஅவர்களிடம் தந்தார். "பேராசையினால் இப்படிப்பட்ட இழப்பு வந்ததே' என்றுவருந்தினார் பண்ணையார்.

அந்தப்பொற்காசுகளை ஊர் மக்களுக்குப் பிரித்துக்கொடுத்தார் கந்தசாமி.

அந்த பண்ணையாருக்கு இந்த அடி போதும்... இனி அவர் உங்களைத் துன்பப்படுத்த மாட்டார். மகிழ்ச்சியாக இருங்கள்,'' என்று சொல்லிவிட்டு அங்கிருந்துபுறப்பட்டார்.

-நன்றி தினமலர்!

சிறுவர் கதைகள் - உங்க பேரைச் சொல்லி... சிறுவர் கதைகள் - உங்க பேரைச் சொல்லி... Reviewed by haru on September 07, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]