Ads Below The Title

அரசர் கதைகள் - ஆறாவது முட்டாள்!

ஆறாவது முட்டாள்!

அரசர் கிருஷ்ணதேவராயருக்கு அன்று விபரீதமான ஓர்ஆசை ஏற்பட்டது. அவர் அப்பாஜியிடம், “அமைச்சரே, இன்று மாலை ஆறு மணிக்குள்நம் தலைநகரான விஜயநகரை நீர் நன்றாகச் சுற்றிப்பார்த்து, ஆறு முட்டாள்களின் விலாசத்தைக்குறித்துக் கொண்டு வாருங்கள்'' என்றுஆணையிட்டார்.

முட்டாள்களின்முகவரி எதற்கு?'' என்று பணிவுடன் கேட்டார்அப்பாஜி.

வீணாகவிளக்கம் கேட்க வேண்டாம். சொன்னதைச்செய்யும்!'' என்று அரசர் கண்டிப்பாகக்கூறினார்.

அரசர் விருப்பப்படி முட்டாள்களைத் தேடி அலைந்தார் அப்பாஜி. அந்தி நேரத்திற்குள் ஆறு முட்டாள்களைத் தேடிக்கண்டுபிடித்து அவர்கள் விலாசத்தைக் குறிக்கவேண்டுமே! எங்கே போவது? எப்படிமுட்டாள்களைச் சந்திப்பது?

அப்பாஜிஇரண்டு மணி நேரம் மாறுவேடமணிந்து முட்டாள்களைத் தேடினார். யாரையும் காணோம். நகர எல்லையைஒட்டிய மரத்தின் நிழலில் சிறிது நேரம்நின்றார்.

அப்போதுஒருவன் கழுதை மீது ஏறிவந்தான். அவன் தலை மீதுஒரு புல்கட்டினைச் சுமந்து கொண்டிருந்தான்.

ஐயா, கழுதை மீது இருக்கும்நீர் ஏன் புல்கட்டினைச் சுமந்துக்கொண்டிருக்கிறீர்?'' என்று கேட்டார் அப்பாஜி.

உமக்குஅறிவு இருக்கா? என் கழுதைக்கு வயதாகிவிட்டது. ரொம்பவும் தளர்ந்து விட்டது; அதனால், என்னை மட்டுமேசுமக்க இயலும். இந்தப் புல்கட்டினையும்சேர்த்துச் சுமக்க இயலாது. ஆகவே, நான் புல்கட்டினைச் சுமந்து செல்கிறேன்'' என்றான்.

அப்பாஜிக்குஒரே மகிழ்ச்சி. தான் தேடி வந்தமுட்டாள்களில் ஒருவன் அகப்பட்டுக் கொண்டானே! அவனிடம் சாமர்த்தியமாகப் பேசி அவனது விலாசத்தைக்கேட்டுக் குறித்துக் கொண்டார்.

சிறிதுதூரம் சென்றதும் அருகில்உள்ள ஒரு மரத்தின் நுனிகிளையில் ஒருவன் உட்கார்ந்துக் கொண்டுமரத்தை வெட்டிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்த அப்பாஜி,

ஐயா! இப்படி உட்கார்ந்துக் கொண்டுவெட்டினால் நீங்கள் கீழே விழுந்துவிடுவீர்கள். அந்த பக்கமா உட்கார்ந்து வெட்டுங்க'' என்றார்.

ஏன்யா... நான் என்ன மடயன்னு நெனச்சியா... நான் இப்படி உட்கார்ந்துகிட்டு மரத்தைவெட்டினா இந்த மரக்கிளை கீழேவிழும். நீ உடனே தூக்கிகிட்டு ஓடலாம்னு பார்த்தியா? அதுக்காகத் தானே நான் இங்கஉட்கார்ந்துகிட்டு வெட்டுறேன்'' என்றான்.

சே! உங்க புத்திசாலித்தனம் யாருக்குவரும்... உங்க வீட்டு முகவரியைகொடுங்க...'' என்று வாங்கிக் கொண்டார்.  

அடுத்து பாட்டி ஒருத்தி அடுப்பைபற்றவைக்க மிகவும் போராடிக் கொண்டிருந்தார்.

பாட்டிஎன்ன பிரச்னை? என்றார் அப்பாஜி,

அய்யா! இது நல்லா காய்ஞ்ச விறகுதான். மண்ணென்ணெய் இல்லை. தண்ணியும், மண்ணென்ணெயும்ஒரே மாதிரி தானே இருக்குஅதனால இந்த விறகுகள்ல நல்லாதண்ணிய ஊத்தி எரிய வைக்கமுயற்சி செய்றேன் எரியவே மாட்டேங்குது'' என்றாள். சிரித்துக் கொண்டே அவளது முகவரியையும்குறித்துக் கொண்டார் அப்பாஜி.

அடுத்தமுட்டாள் அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. இன்னும் மூன்று முட்டாளைத் தேடியாகவேண்டும்! ஒரு மணி நேரமேஉள்ளது.

அலுத்துப்போய் ஆற்றங்கரைக்குச் சென்றார் அப்பாஜி. அங்கே ஒருவன் குளித்துமுடித்துவிட்டு இங்கும் அங்கும் அலைந்துகொண்டிருந்தார். அப்பாஜி அவனிடம்,

தாங்கள்எதைத் தேடிக் கொண்டு அலைகிறீர்கள்?'' என்று விசாரித்தார்.

அவன், “ஐயா, நான் என்உடைகளையும் கொஞ்சம் பணத்தையும் ஓர்இடத்தில் வைத்துவிட்டுக் குளித்தேன். குளித்துவிட்டு வந்து பார்த்தால் பணத்தையும், உடைகளையும் காணோம்'' என்று கவலையுடன் கூறினான்.

ஏதாவதுஅடையாளம் வைத்து இருந்தாயா?''

ஆமாம், அடையாளத்தையும் காணோம்.''

என்ன அடையாளம்?''

வானத்தில்வெண்மேகம் ஒன்றிருந்தது. அதை அடையாளமாகக் கொண்டுஅதன் அடியில் அவற்றை வைத்தேன்.''

அவனது முட்டாள்தனத்தைப் புரிந்து கொண்ட அப்பாஜி அவன்பெயரோடு விலாசத்தையும் குறித்துக் கொண்டார்.

மாலை ஆறு மணி அப்பாஜிஅரசனிடம் விரைந்து சென்றார். நான்கு முட்டாள்களுடைய விலாசத்தையும்கொடுத்தார்.

கிருஷ்ணதேவராயர்அவற்றைப் பார்த்தார். முட்டாள்களின் விபரங்களை அறிந்து ரசித்து சிரித்தஅரசன், “அமைச்சரே, இன்னும் இரண்டு முட்டாள்களின்விலாசம் எங்கே?'' என்று கேட்டார்.

அப்பாஜி, “அரசே, ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தின்மந்திரி நாள் முழுவதும் முட்டாள்களைத்தேடிக் கொண்டு அலைந்தது முட்டாள்தனமல்லவா! ஆகவே, எனது விலாசத்தை ஐந்தாவதாகஎழுதிக் கொள்ளுங்கள்'' என்று பணிவோடு வேண்டினார். அரசரும் அப்பாஜியின் முகவரியை எழுதிக் கொண்டார்.

பிறகு, “அமைச்சரே, ஆறாவது முட்டாளின் விலாசம்எங்கே?'' என்று அரசர் ஆர்வத்துடன்கேட்டார்.

அரசே, கோபித்துக் கொள்ளாதீர்கள்! உங்கள் விலாசம் உங்களுக்குத்தெரியாதா? ஒரு நாட்டின் அமைச்சருக்குஎன்ன வேலை கொடுக்க வேண்டும்என்று ஒரு ஒழுங்கு கிடையாதா? நாம் அறிவாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களால்பல நன்மைகளைப் பெற வேண்டுமே தவிர, முட்டாள்களைத் தேடிக் கண்டு பிடித்து, அவர்களது தொடர்பால் நம்மையும் முட்டாளாக்கிக் கொள்ளக் கூடாதல்லவா!'' என்றுஉருக்கமாகக் கூறினார்.

அரசனுக்குத்தான் செய்த தவறு புரிந்துவிட்டது. தன் கையிலிருந்து நான்குமுட்டாள்களின் விலாசத்தையும் உடனே கிழித்து எறிந்தார். அப்பாஜியின் அறிவுக் கூர்மையையும் துணிச்சலையும்பாராட்டி அவருக்குப் பரிசு அளித்தார்.

அரசர் கதைகள் - ஆறாவது முட்டாள்! அரசர் கதைகள் - ஆறாவது முட்டாள்! Reviewed by haru on October 14, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]