Ads Below The Title

thavaraana ennam tamil story

ஒரு அடர்ந்த காட்டில்
கர்வம் பிடித்த நரி ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த நரி ஒரு நாள் காலையில்,
உணவை தேடி வேட்டைக்கு மேற்கு நோக்கி கிளம்பியது. அப்போது கிழக்கே இருந்து
எழுந்த சூரிய ஒளியால் நரியின் நிழல் மிக பெரியதாக தெரிந்தது. தனது நிழலை பார்த்த நரிக்கு ஒரே
சந்தோசம். "நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். அதுவும் இந்த காட்டின் ராஜாவாக
உள்ள சிங்கத்தை விடவும் பெரியவனாக நான் உள்ளேன் என நினைத்துகொண்டே
வேட்டைக்குச் சென்றது. செல்லும் வழியில் நரி ஒரு சிங்கத்தை
கண்டது. சிங்கமோ சற்று முன்னர் தான் ஒரு மானை வேட்டையாடி அதை உண்ட
களைப்பில் மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தது. நரியும் தன்னுடைய நிழல் சிங்கதைவிடவும்
பெரியதாக இருபதாக நினைத்துகொண்டு சிங்கம் வரும் வழியில் நடந்து சென்றது.
சிங்கமும் உண்ட களைப்பில் இருந்ததால் நரியை ஒன்றும் செய்யாமல் கடந்து
சென்றது. நரிக்கோ ஒரே குஷி. நாம் சிங்கத்தை
விடவும் பெரியதாக இருபதனால் சிங்கம் என்னைகண்டு பயந்து சென்றது என
நினைத்துகொண்டு அன்று மாலை தன்னுடைய வீட்டிற்க்கு சென்றது. மாலை வீட்டிற்க்குச் சென்றதும் நரி காட்டில் உள்ள மிருகங்களை எல்லாம் அழைத்தது. அனைத்து மிருகங்களும் நரியின்
கூட்டத்திற்கு வருகை புரிந்தன. நரி அனைத்து மிருகங்களிடமும், "இனிமேல் இந்த
காட்டிற்கு நான் தான் ராஜா" என்றது. யானையோ, “இதை நாங்கள் ஏற்க முடியாது
என்றது. உடனே நரி காலையில் நடந்த சம்பவத்தைக் கூறி சிங்கமே என்னைக்
பார்த்து பயந்து சென்றது” என்றது. கூட்டத்தில் இருந்த மானோ, “சிங்கத்தை உன்
முன் மண்டியிடச் சொல் பிறகு உன்னை இந்த காட்டிற்கு ராஜவாக்குகிறோம்”
என்றது. அடுத்த நாள் நரி அந்த சிங்கத்தை தேடிச்
சென்றது. செல்லும் வழியில் சிங்கம் தன்னுடைய பாதையை நோக்கி வருவதை கண்டு
நரி கர்வத்துடன் நின்றது. சிங்கம் வந்தவுடன் சிங்கத்தை பார்த்து, நரி "என் முன்னாள் மண்டியிட்டுச் செல்" என்று கூறியது. சிங்கமோ மிகவும் கோவத்துடன், தரக்குறைவாக பேசிய நரியை பார்த்து, "உன்னை மன்னித்து விடுகிறேன் உடனே இங்கிருந்து ஓடிவிடு" என்றது. நரியோ சிங்கம் தன்னை கண்டு பயந்து
விட்டது என நினைத்து “முடியாது” என்று பதில் கூறிக்கொண்டே தன்னுடைய நிழலைப்
பார்த்தது. அது மதிய நேரம் என்பதால் நரியின் நிழல் உண்மையான அளவில்
இருந்தது. அப்பொழுது தான் நரிக்கு புரிந்தது சூரிய ஒளியில் தான் தனுடைய
நிழல் பெரியதாக இருந்தது என்று. இதை பொறுத்துக்கொள்ள முடியாத சிங்கம் நரியை ஒரே அடியினால் கொன்று தின்றது.

ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். பிலிப்பியர் 2:3
thavaraana ennam tamil story thavaraana ennam tamil story Reviewed by haru on August 24, 2016 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]