Ads Below The Title

Be wise servant Tamilstory

ஒரு ஜமீந்தார் தன்னிடம் பல்லாக்கு சுமக்க நான்கு பேரை மாத சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தி வைத்திருந்தார். தான் வெளியில் போகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அந்த நால்வரும் வீட்டில் அமந்திருப்பர்கள் . அப்படி பட்ட நேரத்தில் அந்த நான்கு பேரிடம் எதாகிலும் சிறிய வேலைகள் இருக்கும் என்றால் வேலை வாங்குவது அந்த ஜமீன்தாரின் வழக்கம். அந்த நான்குபேரில் ஒருவனுக்கு இப்படி வேலை வாங்குவது பிடிக்க வில்லை , அவன் மற்ற மூவரிடம் நாம் பல்லாக்குதூக்கவே வேலைக்கு வந்தோம் அனால் இந்த ஜமீன்தார் நாம் ஓய்வாக இருக்கும் நேரத்தில் மற்ற வேலைகளை செய்ய சொல்லி தொல்லை தருகிறார் . எனவே பல்லாக்கு தூக்குவதை தவிர வேறு வேலை எதைசொன்னாலும் செய்யக்கூடாது என்று தீர்மானம் செய்து கொண்டனர்.
ஒரு நாள் ஜமீன்தாரின் வீட்டில் ஒரு கோழி காணாமல் போய் விட்டது . உடனே ஜமீந்தார் அந்த நான்கு பேரையும் அழைத்து ஒரு கோழி காணமல் போய் விட்டது அது இந்த கலரில் இருக்கும் போய் அதை தேடி கண்டு பிடித்து வாருங்கள் என்றுசொல்லி அனுப்பினார், அதற்கு அவர்கள் நாங்கள் பல்லாக்கு தூக்கவே வேலைக்கு வந்தோம் இதெல்லாம் எங்கள் வேலை அல்ல என்று சொல்லி போக மறுத்தனர் . ஜமீன்தார் எவ்வளவு எடுத்து சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை , ஜமீன்தார் நீண்ட யோசனைக்கு பிறகு சரி நீங்கள் பல்லாக்கு தூக்குங்கள் நான் என் கோழியை தேடி கண்டுபிடித்து கொள்கிறேன் என்றார் . அவர்களும் பல்லாக்கு ஆயத்தம் செய்ய ஜமீன்தார் அதிலேறி அமர்ந்து கொண்டு கோழியை தேட போனார். காலை தொடங்கி மாலை வரை தேடியும் கோழி கிடைக்கவில்லை அதிகம் களைப்படைந்த நால்வரும் புத்தி தெளிந்து அந்த ஜமீந்தாரை வீட்டில் கொண்டு போய்இறக்கிவிட்டு ஐயா நாங்கள் தவறு செய்து விட்டோம் தயவு செய்து எங்களை மன்னியுங்கள் நீங்கள் வீட்டிலேயே இருங்கள் நாங்கள் போய் அந்த கோழியை தேடி கண்டுபிடித்து கொண்டு வருகிறோம் என்று தேடி சென்றனர் .
இப்போ நம்ம கதைக்கு வருவோம் நம்மில் அநேகர் இப்படித்தான் இயேசு என்னை பரலோகத்திற்கு மட்டுமே அழைத்தார் என்று எண்ணி அவர் சொன்ன கடமைகளை செய்ய தவறி விடுகிறோம் . உதாரணத்திற்கு துதிக்க , ஆராதிக்க , ஜெபிக்க , ஊழியம் செய்ய , மற்றவர்களுக்கு உதவி செய்ய என்று எல்லா வற்றையும் விட்டு விட்டு வெறுமையே பரலோக கனவு கண்டுகொண்டிருக்கிறோம் . இதையும் செய்ய வேண்டும் அதையும் விடா திருக்க வேண்டும் என்றே ஆண்டவர் நம்மை அழைத்து இருக்கிறார் . இந்த காரியத்தை மறந்தால் நாமும் மேலே சொன்ன நால்வரில் ஒருவராகத்தான் இருப்போம் . சிந்திப்போம் செயல்படுவோம் .
Be wise servant Tamilstory Be wise servant Tamilstory Reviewed by haru on July 12, 2017 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]