Ads Below The Title

சிறுவர் நீதிக்கதைகள் - நாவினால் சுட்ட வடு

நாவினால் சுட்ட வடு:-

ஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால்அவனுக்குக் கோபம் வரும்.

கோபம் வந்தால் தலைகால் தெரியாமல்வாய்க்கு வந்த படி வயதுவரம்பில்லாமல் எல்லோரையும் பேசி விடுவான். பின்னர்அவர்களிடம் வருத்தப் படுவான்.

நாளடைவில்அவனை சுற்று வட்டாரத்தில் பலருக்குஇதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்கஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக்கொள்ளவேண்டும் என்று தோன்றினாலும் எப்படிஎன்றுதான் தெரியவில்லை.

அவனுடைய அப்பா பொறுத்துப்பொறுத்துபார்த்து விட்டு ஒரு நாள்அவனிடம் ஒரு வாளி நிறையஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.

ஒவ்வொருமுறை ஆத்திரப்படும் போதும் சம்பந்தப்பட்டவர்களைத் திட்டுவதைத்தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால்உள்ள மரவேலியில் ஒருஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்துஏற்றி விடும்படி அறிவுரைத்தார்.

முதல் நாள் வேலியில் சுமார்50 ஆணிகளை அறைந்து ஏற்றினான்.  

நாட்கள்செல்லச்செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள்முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டான். கோபம் வந்தால்தான் உடனேஆணி அடிக்கப் போக வேண்டுமே!

நாளடைவில்வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப்பக்கம்போகுமுன் கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி அறைவது குறையத்தொடங்கியது. சில நாட்களில் வேலியில்ஆணி அடிக்க வேண்டிய தேவையேஅவனுக்கு இருக்கவில்லை.

அப்பாவிடம் போய் விபரத்தைச்சொன்னான். அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல்அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும்கருவியைக்கொடுத்து வேலியில் அவன் அடித்த ஆணிகளைஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க அவனுக்கு முழுதாக ஒரு நாள்பிடித்தது.

எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும்வேலியை பார்க்கப்போனார்கள். அப்பா வேலியில் ஆணிகளைப்பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக்காட்டிகோபம் வந்தால் அறிவிழந்துசொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான். ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்குமன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்தஇடத்தில் உள்ள வடு இந்தஆணி ஏற்படுத்திய வடுவைப்போலவே மறைவதுமிகக்கடினம்என்று அவனுக்குஎடுத்துக் கூறினார்.

மகனும்கருத்தை நன்றாக உணர்ந்து திருந்திஊர் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில்வெற்றிகள் பல பெற்றான்.

பாடம் : தீயினால் சுட்ட புண் விரைவில் ஆறிவிடும். அனால் நாவினால் சுட்ட புண் ஆறாது, மாறாக வடுவாய் உள்ளத்தில் என்றும் இருக்கும்.

சிறுவர் நீதிக்கதைகள் - நாவினால் சுட்ட வடு சிறுவர் நீதிக்கதைகள் - நாவினால் சுட்ட வடு Reviewed by haru on August 14, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]