சிறுவர் கதைகள் - குயில் டாக்டர்!
சிறுவர் கதைகள் - குயில் டாக்டர்!
கற்பூரவள்ளிஎன்ற காட்டில் ஆந்தை குடும்பம் ஒன்றுவாழ்ந்து வந்தது. ஆந்தைக்கு இரண்டுஆந்தை குஞ்சுகள் இருந்தன. தன் குஞ்சுகளை பேணிபராமரித்து வளர்த்தது தாய் ஆந்தை. குஞ்சுகள்வளர வளர அம்மாவிடம் பலகேள்விகள் கேட்க ஆரம்பித்தன.
ஒரு நாள், “அம்மா எல்லாரும்பகலில்தான் சுறுசுறுப்பாக உலாவிக் கொண்டிருக்கின்றனர். நாம்மட்டும் பகலில் துõங்கிவிட்டுஇரவில் இரை தேடுகிறோம். நாம்சென்று இரை தேடும் வேளையில்ஊரே உறங்கி கொண்டிருக்கிறது. இதுஏன்?” என்றது.
“நமக்குபகலில் கண் தெரியாது. இரவில்தான்கண் தெரியும். அத னால் தான்நாம் பகலெல்லாம் துõங்கிவிட்டு இரவில்சென்று இரை தேடுகிறோம்,” என்றதுதாய் ஆந்தை.
“ஏனம்மாகடவுள் நம்மை மட்டும் இப்படிபடைத்துவிட்டார்?” என்று கேட்டது இன்னொருஆந்தை குஞ்சு.
“கடவுள்நம்மையெல்லாம் ஒரே மாதிரிதான் படைத்தார். முன்னொரு காலத்தில் நம்முடைய முன்னோர்களில் ஒருவர் செய்த தவறைத்தான்நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்,” என்றது தாய் ஆந்தை.
“அப்படிஎன்ன தவறு செய்தார்?” என்றுகேட்டன குஞ்சுகள்.
“ஒரு முறை நம் முன்னோர்ஒருவர் காகம் ஒன்றிடம் மிகவும்நட்பாக இருந்தார். ஒரு நாள் அந்தகாகத்திற்கு உடல்நிலை மிகவும் சரியில்லை. எனவே, அதை அழைத்து கொண்டு காட்டில்டாக்டராக இருந்த குயில் டாக்டரிடம்சென்றனர்.
“குயில்டாக்டரோ நன்றாக வைத்தியம் பார்த்துகாக்காவை குணமாக்கிவிட்டது. அதன் பிறகு டாக்டருக்குபீஸ் கொடுக்கணும் இல்லையா? ஆனால், இவர்கள் இருவரும்கொடுக்கவில்லை. எனவே, குயில் டாக்டர்எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தைகொடுங்கள் என்று கேட்டது.
“இவர்கள்இருவரும் எங்களிடம் பணம் இல்லை என்றுசொல்லிவிட்டு ஓடி வந்துவிட்டனர். அதன்பிறகு இவர்கள் இருவரையும் பார்க்கும்பொழுதெல்லாம் பணம் கேட்க ஆரம்பித்ததுகுயில் டாக்டர். ஏதுடா தொல்லையாப்போச்சு என்றுநினைத்த நம்முடைய பாட்டனாரான ஆந்தையார், பகலில் தலைகாட்டுவதே இல்லை. இரவில் மட்டுமே வெளியே வருவதும்இரையை பிடித்து தின்பதுமாக இருந்திருக்கிறார்.
“பகல் முழுவதும் மரப் பொந்துகளில் படுத்துநன்கு துõங்குவது... இரவில்எழுந்து வெளியே செல்வது... இப்படியேஇருந்ததால் ஆந்தையாரை கண்டுபிடிக்க முடியவில்லை குயில் டாக்டரால். அதனால்ஆத்திரமடைந்த குயில் டாக்டர், காக்காவைபிடித்து நன்கு திட்டியிருக்கிறது.
“அந்த திருட்டு காக்கா கடுமையாக வேலைசெய்தாவது டாக்டர் பீசை கொடுத்திருக்கவேண்டியதுதானே... அப்படி கொடுக்கவில்லை. இதனால்கோபம் கொண்ட குயில் டாக்டர், இனிமேல் எங்கள் இனத்தார் இடும்முட்டைகளை எல்லாம் உன் இனத்தார்தான் காவல்காக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டது.
“அன்றிலிருந்துகுயில் இனத்தார் அனைவரும் காக்கையின் கூட்டில் தங்கள் முட்டைகளை இட்டுவிட்டுசென்று விடுவர். அது குயிலின் முட்டைஎன்பது தெரியாமலே காக்கை இனம் வளர்த்துகொண்டு வருகிறது.
“நம்முடையஇனத்தார் பகலில் தூங்கி தூங்கியேநமக்கு பகலில் கண் தெரியாமல்போய்விட்டது. இதுதான் கதை,” என்றதுதாய் ஆந்தை.
“அம்மாபிறரை ஏமாற்றுவதால் ஏற்படும் கஷ்டம் காலம் காலமாகபலரை பாதிப்பதை புரிந்து கொண்டோம். இனிமேல் நாங்கள் ஒருகாலும்இப்படிப்பட்ட காரியத்தை செய்யவே மாட்டோம்,” என்றனர்.
செல்லமாகதன் குஞ்சுகளை அணைத்து முத்தமிட்டது தாய்ஆந்தை.
சிறுவர் கதைகள் - குயில் டாக்டர்!
Reviewed by haru
on
August 15, 2012
Rating:
Reviewed by haru
on
August 15, 2012
Rating:



No comments