Ads Below The Title

சிறுவர் கதைகள் – நன்றி மறந்த சிங்கம்!


நன்றி மறந்த சிங்கம்!

முல்லைமலர் என்ற காட்டில் விறகுவெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன்ஒருவன்.

அப்போதுகாட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன்ஓடத் தொடங்கினான் மனிதன்.

மனிதனேபயப்படாதே! இங்கே வா! நான்உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்'' என்றகுரல் கேட்டது.

தயக்கத்துடன்குரல் வந்த திசையை நோக்கிச்சென்றான் மனிதன்.

அங்கு ஒரு கூண்டில் சிங்கம்அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன்பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்துஅதற்குள் ஓர் ஆட்டை விட்டுவைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக்கொண்டது.

மனிதனைப்பார்த்த சிங்கம், “மனிதனே, என்னை இந்தக்கூண்டிலிருந்து விடுவித்து விடு.... நான் உனக்குப்பல உதவிகளைச் செய்வேன்'' என்றது.

நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னைஎப்படி நான் விடுவிக்க முடியும்?'' என்றான் மனிதன்.

மனிதர்களைக்கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டுதான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக்கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்'' என்று நைசாகப் பேசியது சிங்கம்.

சிங்கத்தின்வார்த்தையை உண்மையென்று நம்பிவிட்டான் மனிதன். கூண்டின் கதவைத்திறந்தான். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம்மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று.

இதனைக்கண்ட மனிதன், “சிங்கமே, நீ செய்வது உனக்கேநியாயமா? உன் பேச்சை நம்பிஉன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே.... அதற்கு இதுதானா நீகாட்டும் நன்றி'' என்றான்.

என் உயிரைக் காத்துக் கொள்வதற்காகநான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்? மனிதர்கள் என்றால் பகுத்தறிவுள்ளவர்கள் என்றுதானே பொருள். அந்த அறிவைக்கொண்டு இது நல்லது, இதுகெட்டது என்று பகுதித்தறிய வேண்டாமா? முட்டாள்தனமான உன் செய்கைக்கு நான்எப்படிப் பொறுப்பாக முடியும்?'' என்றது சிங்கம்.

கடவுள்உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றியஎன்னையே சாப்பிடுவது நியாயமா?' உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரிநடந்து கொள்வது முறையல்ல'' என்றான்மனிதன்.

அவ்வழியாகஒரு நரி வந்தது.

இதனிடம்நியாயம் கேட்போம்'' என்று கூறிய மனிதன்நடந்த கதையனைத்தையும் நரியிடம் கூறினான்.

எங்கள்தொழில் அனைவரையும் அடித்துக் கொன்று சாப்பிடுவதுதான். இதுஇவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட என்னைக் கூண்டிலிருந்துவிடுவித்தான். முட்டாள்தனமான இந்தச் செய்கைக்கு உரியபலனை இவன் அனுபவித்தே தீரவேண்டும். நீ என்ன சொல்றநரியாரே....'' என்றது.

அனைத்தையும்கேட்ட நரி ஒன்றும் புரியாததைப்போல் பாவனை செய்தது.

நீங்கள்இந்த மாதிரி சொன்னால் எனக்குஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்'' என்றது நரி.

உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது.

நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்துகிடந்தேன்....''

எந்தக்கூண்டிற்குள்?'' என்றது நரி.

அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்'' என்றதுசிங்கம்.

எப்படிஅடைந்து கிடந்தீர்கள்?'' என்றது நரி.

சிங்கம்விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்றுகருதிய நரி சட்டென்று கூண்டுக்கதவை இழுத்து மூடியது.

நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம்கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும்கூண்டில் அடைத்துவிட்டீரே!'' என்று கத்தியது சிங்கம்.

நீங்கள்பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள். நான் ஒன்றும் இந்தமனிதனைப் போல் முட்டாள் அல்ல. உங்களுக்குச் சாதகமாக நியாயம் சொன்னால்முதலில் மனிதனை அடித்துக் கொல்வீர்கள். பிறகு என்னையே அடித்துக் கொன்றுவிடுவீர்கள். அதனால் தான் உங்களைக்கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டிவிட்டேன்'' என்றது நரி.

நன்றி மறந்த சிங்கம் தன்நிலையை நினைத்து நொந்து போனது.

நீதி : ஒருவர்செய்த நன்றியை மறப்பது மிகப்பெரிய பாவம். அப்படி செய்பவர்களைஇறைவன் தண்டிக்காமல் விடமாட்டார்.

சிறுவர் கதைகள் – நன்றி மறந்த சிங்கம்! சிறுவர் கதைகள் – நன்றி மறந்த சிங்கம்! Reviewed by haru on August 30, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]