Ads Below The Title

சிறுவர் கதைகள் – அதிசய மோதிரம்!

அதிசய மோதிரம்!

முன்னொருகாலத்தில், கிராமம் ஒன்றில் ஒருவிவசாயி வாழ்ந்து வந்தான். செய்வதற்கு வேலையும் கிடைக்காமல், அப்படி வேலை கிடைத்தாலும், அதன் மூலம் போதிய வருமானம்இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையைநகர்த்திக் கொண்டிருந்தான்.

அந்த சமயத்தில் ஒருநாள்....

தேவதை ஒன்று அவனிடம் வந்தது.

அந்தத்தேவதையிடம் அவன், தனது வாழ்க்கையில்அவன் படும் கஷ்டங்களையெல்லாம் சொன்னான். தனக்கு ஒரு விடிவு காலம்வருமாறு வழிவகை செய்ய வேண்டுமென்றும், தேவதையிடம் வேண்டிக் கொண்டான்.

நான் சொல்கிறபடி செய்.... நேராக இதோ எதிரேதெரியும் காட்டுக்குள் செல். அங்கு பலவகையான மரங்கள் உள்ளன. அவற்றில்எல்லா மரங்களையும் விட ஒரு மரம்உயரமாக வளர்ந்து நிற்கும். அந்த மரத்தின் பெயர்பைன் மரம். அதை அப்படியேவெட்டிப் போடு. அப்புறம் அதிர்ஷ்டம்உன்னைத் தேடி வரும். உன்கஷ்டங்கள் எல்லாம் தீரும்,'' என்றுஅந்த தேவதை ஏழை விவசாயிக்குவழிகாட்டியது.

அடுத்தநாளே, அந்த ஏழை விவசாயிகையில் கோடாரியை எடுத்துக் கொண்டு காட்டை சென்றடைந்தான். காட்டுக்குள் இருந்த பைன் மரத்தைக்கண்டுபிடிக்க இரண்டு நாட்கள் அங்குமிங்கும், தேடி அலைந்தான். இறுதியில் ஓங்கி உயர்ந்து நின்றுகொண்டிருந்த பைன் மரத்தைக் கண்டு, மகிழ்ச்சி அடைந்தான். பிறகு, தனது கையிலிருந்தகோடாரியால் பைன் மரத்தின் அடிப்பாகத்தைஓங்கி வெட்டினான். அது தரையின் மீதுவிழும் போது, அதன் முனைப்பகுதியில் இருந்து ஒரு பறவைக்கூடும் விழுந்தது. அக்கூட்டில் இரண்டு முட்டைகள் இருந்தன.

விழுந்தவேகத்தில் அந்த முட்டைகள் உருண்டோடிஉடைந்தன. ஒரு முட்டையிலிருந்து ஒருகழுகுக் குஞ்சு வெளிப்பட்டது. இன்னொருமுட்டையிலிருந்து, ஒரு மோதிரம் வெளிவந்துஉருண்டோடியது.

கழுகுக்குஞ்சு பெரிதாக வளர்ந்து கொண்டேபோனது. அந்த விவசாயியின் பாதியளவுக்குப்பெருத்து விட்டது. இந்தக் காட்சியைக் கண்டுவிவசாயிக்கு ஒரே ஆச்சரியம். அவனால்தனது கண்களையே நம்ப முடியவில்லை. அந்தக்கழுகு தனது சிறகை அடித்துப்பறக்கும் முன் விவசாயியைப் பார்த்து, “எனது அடிமைத்தளத்திலிருந்து எனக்கு விடுதலை அளித்துவிட்டீர்கள். உங்களுக்கு எனது நன்றி.

அடுத்தமுட்டையிலிருந்து வெளிவந்துள்ள மோதிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஓர் ஆச்சரியமானஅதிசய மோதிரம். நீங்கள் எதைக் கேட்டாலும்அது கொடுக்கும். ஆனால், அதை ஒரேஒரு தடவை பயன்படுத்தி விட்டால், அது சாதாரண மோதிரம் ஆகிவிடும். இதுதான் அந்த மோதிரத்தின் அற்புதசக்தியாகும். எனவே, ஆழ்ந்து சிந்தித்துமுடிவெடுங்கள். அசட்டையாய் இருந்து விட்டால், பின்னர்வருத்தப்பட நேரிடும்,'' என்று கழுகு சொல்லிவிட்டுஉயரே பறந்து கண்ணுக்குத் தெரியாமல்மறைந்தது.

மிகவும்மகிழ்ச்சி அடைந்தான் விவசாயி. அந்த மோதிரத்தை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டான். செல்லும் வழியில், அங்குள்ள நகைக் கடைக்குச் சென்றான்.

நகை வணிகரிடம் அந்த மோதிரத்தைக் காட்டி, “இதன் மதிப்பு என்ன இருக்கும்?'' என்று கேட்டான். மோதிரத்தை வாங்கிப் பார்த்த நகை வணிகர், “இதற்கு ஈடாக யாரும் ஒருபுல்லுக்கட்டு கூடத் தரமாட்டார்,'' என்றுகூறினான்.

நகை வணிகர் கூறியதைக் கேட்டவிவசாயி சிரித்துக் கொண்டே அவரிடம், “இந்தமோதிரத்தின் மகிமையைப் பற்றி உனக்கு தெரியாது. உலகத்திலுள்ள எல்லா மோதிரங்களையும் சேர்த்தாலும்இதன் மதிப்புக்கு ஈடாகாது,'' என்று கூறிய விவசாயி, அந்த மோதிரம் தனக்கு எப்படிக்கிடைத்தது என்றும் விளக்கமாகக் கூறினான்.

விவசாயிகூறியதைக் கேட்டு, மோதிரத்தின் மகிமையைஅறிந்து கொண்ட நகை வணிகனின்உள்ளத்தில் பேராசை தலை தூக்கியது. அவன் அந்த மோதிரத்தை அபகரிக்கதிட்டம் போட்டான்.

விவசாயியிடம்வணிகர் மிகவும் கனிவாக, “ஐயா, நீங்கள் இன்று இரவு எனதுவீட்டில் தங்கிவிட்டு, நாளை காலையில் செல்லவேண்டும் என்பது என் விருப்பம்,'' என்று கூறினான். விவசாயியும் அதற்குச் சம்மதித்தார்.

அன்று இரவு விவசாயிக்கு நல்லஅறுசுவை விருந்து. விருந்தின் முடிவில் திராட்சை ரசம் வேறு. அதைவாங்கிக் குடித்த விவசாயி சிறிதுநேரத்தில் மயங்கி விழுந்தான்.

அந்த சமயம் பார்த்து விவசாயியின்கையிலிருந்த மோதிரத்தை திருடிக் கொண்டு, ஒரு சாதாரணமோதிரத்தை மாட்டிவிட்டான் வணிகன்.

விவசாயிநன்றாகத் தூங்கினான். "மோதிரத்தைப் பயன்படுத்தி உலகின் முதல் பணக்காரனாகஆகி விடலாம்' என்று எண்ணி ஆனந்தவெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான் வணிகன்.

மறுநாள்பொழுது விடிந்தது. சிறப்பான விருந்து கொடுத்தமைக்கு நன்றி சொல்லிவிட்டு, நகைவணிகனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு தனது வீட்டைநோக்கிப் புறப்பட்டான் விவசாயி.

நகை வியாபாரியோ, அந்த மாய மோதிரத்தைக்தன் கை விரலில் அணிந்துகொண்டு, ஒய்யாரமாகத் தன் இருக்கையில் அமர்ந்தவாறே, மாய மோதிரத்தைப் பார்த்து, “எனக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள்வேண்டும்,'' என்று கேட்டான்.

மோதிரம்தனக்குள்ளாக, "அடப்பாவி! ஒரு அப்பாவி ஏழையைஏமாற்றி, அவனிடமிருந்து என்னைத் திருடி, என்மூலம் உலகப் பணக்காரன் ஆகப்பார்க்கிறாயா? இதோ, உன் கதையைஇப்போதே முடித்து விடுகிறேன்' என்று சொல்லிக் கொண்டது.

நகை வணிகன் கேட்டுக் கொண்டமாதிரியே, அந்த மோதிரம் தங்கக்காசுகளை அவனது தலையில் மழைபோல்பெய்து கொண்டிருந்தது.

தங்கக்காசுகள், "பட் பட்' என்றுஅவனது தலை மீது விழுந்தன.

தலை வலிக்கிறது, போதும் போதும்!'' என்றுகத்தினான். ஆனால், தங்க மழைநின்றபாடில்லை.

கடைசித்தங்கக் காசு அவனது தலையில்விழுந்தவுடன் தங்க மழை ஓய்ந்துபோனது.

ஆனால், விழுந்து கிடந்த தங்கக் காசுகளைஅந்த வணிகனால் எடுக்க முடியவில்லை. காரணம், தங்க மழை ஓய்வதற்கு முன்பே, அவனது உடலை, விட்டு அவனதுஉயிர் போய் விட்டது.

தங்க மழை பெய்ததால், நகைவியாபாரி இறந்துவிட்டார் என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவியது.

நகை வியாபாரியின் வீட்டை நோக்கி ஓடினர். நகை வியாபாரி மீது தங்கக் காசுகள்குவிந்து கிடந்தன.

"இப்படிமழைபோல் தங்க காசுகள் வந்தால், தீமையும் வராமலா போய் விடும்' என்று வந்தவர்கள் பேசிக்கொண்டனர். பின்னர் ஆளுக்கு இரண்டுதங்கக் காசுகள் எடுத்துக் கொண்டுஅவரவர் வீட்டை நோக்கிச் சென்றனர்.

பின்னர்நகை வியாபாரியின் கைவிரலில் இருந்த அந்த மாயமோதிரம்தானே கழன்று, அந்த விவசாயியின்வீட்டை நோக்கி பறந்து சென்றது.
சிறுவர் கதைகள் – அதிசய மோதிரம்! சிறுவர் கதைகள் – அதிசய மோதிரம்! Reviewed by haru on August 17, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]