Ads Below The Title

சிறுவர் நீதிக்கதைகள் – நண்பா!

நண்பா! (புறா - கட்டெறும்பு கதை)

ஒரு ஊரில் ஒரு பெரியஆற்றங்கரை இருந்தது. அந்த ஆற்றங்கரையின் ஓரத்தில்ஒரு பெரிய அரச மரமும்இருந்தது. அந்த அரச மரத்தின்கிளையில் ஒரு புறா எப்போதும்வந்து அமர்வது வழக்கம். அப்படிஒரு நாள் அந்த மரக்கிளையில்புறா அமர்ந்து அற்றில் ஓடும் நீரைப்பார்த்துக் கொண்டிருந்தது.

அப்போதுஆற்று நீரில் ஒரு கட்டெறும்புசிக்கி தத்தளிப்பதைக் கண்டது. மறுநிமிடம் அந்தப்புறாவிற்கு அந்தக் கட்டெறும்பின் மீதுபரிதாபமும், இரக்கமும் பிறந்தது. மறுவினாடி அது ஏதோ சிந்தித்துவிட்டு அரச மரத்தின் இலையில்ஒன்றை பறித்து எறும்பு தத்தளிக்கும். இடத்திற்கு சற்று முன்னால் போட்டது.

ஆற்று நீருடன் மெல்ல அடித்துவரப்பட்ட எறும்பு அந்த அரசஇலையின் மீது பட்டதும் கப்பெனஅந்த இலையைப் பற்றிக் கொண்டது. இலைகள் நீரில் அமிழாது அல்லவா? எனவே, அந்த இலையின் மீதுஊர்ந்த எறும்பும் நீருக்குள் அமிழாமல் கரையோரம் இலையுடன் வந்தது.

கரையில்இலை ஒதுங்கியதும் இலையை விட்டு இறங்கியது. மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த புறாவிற்குத் தனது நன்றியைக் கூறியது. தினந்தோறும் எறும்பும், புறாவும் அதே மரத்திடியில் சந்தித்தன. இரண்டும் நல்ல சிநேகிதர்களாயின.

ஒரு நாள் அந்த மரத்தடிக்குஒரு வேடன் வந்தான். அவன்மரக்கிளையில் அமர்ந்திருந்த புறாவைக் கண்டான். ஆனால், வேடன் வந்ததையோ, அவன் தன்னைப் பர்த்ததையோ புறாகவனிக்கவே இல்ல.

வேடன் தன் அம்பையும், வில்லையும்எடுத்தான். மரக்கிளையில் இருந்த புறாவை நோக்கிகுறி வைத்தான். ஏதும் அறியாத புறாபேசாமல் எங்கோ பார்த்தபடி இருந்தது. ஆனால், வேடனின் காலடியில் நின்றஎறும்பிற்கு வேடன் தனது நண்பனானபுறாவை குறி வைப்பது வெகுஎளிதில் தெரிந்துவிட்டது.

உடனே தன் நண்பனின் உயிரைகாப்பது எத்தனை அவசியமானது என்பதைஉணர்ந்தது. அடுத்த நிமிடம் அந்தவேடனின் காலில் நறுக்கென்று கடித்தது. எதிர்பாராமல் கட்டெறும்பு கடித்த வலியில் வேடனின்குறி தவறியது. அவன் எய்த அம்புஎங்கோ போய் விழுந்தது.

இப்படிஏற்பட்ட திடீர் சத்தத்திலும், சலசலப்பிலும்கவனம் சிதறிய புறா வெடுக்கெனதிரும்பியது. மறுநிமிடம் தனக்கு வரவிருந்த பேராபத்தைஉணர்ந்தது. தன் நண்பனான எறும்புதன்னைக் காப்பாற்றியதையும் உணர்ந்தது. மறுபடியும் வேடன் தன்னை நோக்கிகுறி வைக்கும் முன்பாக அந்த இடத்தைவிட்டுப் பறந்தது.

மறு நாள் தன் நண்பனானஎறும்பைப் பார்த்து நன்றி தெரிவித்தது. இரண்டும்ஒன்றின் உயிரை ஒன்று காப்பாற்றியநன்றியில் கடைசிவரை நட்புடன் இருந்தன.

நீதி : நாம்ஒருவருக்கு உதவினால் நிச்சயம் நமக்கு தேவைப்பட்ட சமயத்தில்உதவ யாரேனும் வருவர்.

நன்றி தினமலர்!
சிறுவர் நீதிக்கதைகள் – நண்பா! சிறுவர் நீதிக்கதைகள் – நண்பா! Reviewed by haru on August 18, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]