உடைந்த பானை | The Cracked Pot Story in Tamil
உடைந்த பானை! (Udaintha Paanai) - பஞ்சதந்திர சிறுவர் நீதிக்கதைகள். Read The Cracked Pot Panchatantra Story in Tamil with Pictures for Kids.
உடைந்த பானை!
(பஞ்சதந்திர கதைகள்)
ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத்தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர்எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
தண்ணீர்எடுத்து வர அவன் இரண்டுபானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒருநீளமான கழியின் இரண்டு முனைகளிலும்தொங்க விட்டு, கழியைத் தோளில்சுமந்து செல்வான்.

குறையில்லாதபானைக்குத் தன் திறன் பற்றிபெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும்கேலியும் செய்து கொண்டே இருக்கும்.
இப்படியேஇரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலிபொருக்க முடியாத பானை அதன்எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.
"ஐயா! என் குறையை நினைத்து நான்மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும்தினமும் என் குறையால், வரும்வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள்வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவுகூர்ந்து சரி செய்யுங்களேன்"
அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம்வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும்அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்குமுன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடிவிதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும்சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்துஎனக்கு தினமும் அழகான பூக்களைஅளிக்கின்றன. அவற்றை வைத்து நான்வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம்சம்பாதிக்கிறேன்"
இதைக் கேட்ட பானை கேவலமாகஉணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல்தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது
நீதி : அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்யமுடியாது.
உடைந்த பானை | The Cracked Pot Story in Tamil
Reviewed by haru
on
August 18, 2012
Rating:

No comments