சிறுவர் நீதிக்கதைகள் - பாட்டி வடை சுட்ட கதை
பாட்டிவடை சுட்ட கதை
காக்காமீண்டும் பாட்டியிடம் ஒரு வடையை திருடிச் சென்று உண்பதற்காய் மரக்கிளையில்அமர்ந்தது. நரி மீண்டும் வந்துகாகத்தைப் பார்த்து 'காகமே காகமே உனது பாடலைப் போலவே நீதந்த வடையும் மிகவும் சுவையாகஇருந்தது. உனது நல்ல குணத்திற்குயார் ஈடாக முடியும். களைப்பாறபாடலை கேட்ட எனக்கு நான்பசியோடு இருப்பதை உணர்ந்து வடையும் கொடுத்தாயே பார்... அது தான் நீ' என புகழுரைத்தது.
ஒரு ஊரில் பாட்டி ஒருத்திவடை சுட்டு விற்று வந்தாள். ஒரு நாள் அவ்வழியாக பறந்துவந்த காக்கா ஒன்று ஒருவடையை திருடி வாயால் தூக்கிச்சென்று உண்பதற்காய் மரக்கிளையில் அமர்ந்தது.
அதே பகுதியில் உலாவிக் கொண்டிருந்த நரிக்குஅன்று உணவு எதுவும் கிடைக்கவில்லைஎன்பதை விட ஏய்த்துப் பிழைக்கயாரும் தென்படவில்லை என்பதே உண்மை.பலத்தஏமாற்றத்தோடு அங்கும் இங்கும் அலைந்தநரிக்கு மரத்தின் மீது அமர்ந்திருந்த காக்கைமீது பார்வை சென்றது. அதன்வாயில் ஒரு பெரிய வடைஇருப்பதைப் பார்த்து நாவில் எச்சில் ஊற'இன்றைய நிலைமைக்கு இது போதுமே' எனநினைத்த நரிக்கு 'நரிப்புத்தி' டக்கென்று வேலை செய்ய தொடங்கியது.
காகத்தைஅண்ணாந்து பார்த்து “காகமே காகமே நீநன்றாக பாடுவாயாமே உனது இனிய வாயால்ஒரு பாட்டுப் பாடேன்” எனது களைப்புக்கு உனதுபாடல் இதமாக இருந்தால் நன்றியோடுஇருப்பேன்' என்றது.
காகமோ அதன் தந்திரம் புரியாமல்“கா...கா...கா...” எனகரைந்தது. வடை கீழே விழுந்தது. நரி 'நரிச் சிரிப்போடு' வடையைத்தூக்கிக் கொண்டு மெல்ல நகர்ந்தது. காகம் ஏமாந்ததை எண்ணி வருந்தியது.

காகத்துக்குதடுமாற்றம் 'உண்மையில் நான் தான் தவறு செய்து விட்டேனோ' எனஎண்ணியது. நரியின் தந்திரம் புரிவதுபோலவும், புரியாதது போலவும் அதற்கு இருந்தது.
இதை உணர்ந்த நரியின் நரிமூளை' உடனடியாகச் செய்யல்படத் தொடங்கியது. காகமே! உனதுபாடலில் ஒரு சில சொற்களின்அர்த்தம் புரியவில்லை இன்று ஒருதரம் பாடுவாயேயானால்அர்த்தமும் புரியும் களைப்பும் தீரும்' என்றது.
காகத்தின்சிறு மூளைக்கு நரியின் தந்திரம் புரியத்தொடங்கியது. இருத்தும் நரியின் புகழாரம் சற்றுமயக்கத்தை கொடுத்தது. உடனடியாக தனது வடை மீதுஅதன் கவனம் பரவத் தொடங்கியது.
நேற்றையதுன்பம் இன்றைய புகழ் மயக்கத்தைவென்றது. உடனடியாக தன்னை புகழ்ந்த நரிக்காகபாடவும் முடிவெடுத்து வடையை காலின் உதவியோடுஇடுக்கிப் பிடித்தபடி 'கா...கா...கா... நான் காக்கா தான்' எனராகத்தோடு கரைந்தது.
தனது தந்திரத்தை காகம் புரிந்து கொண்டுவிட்டதே என்ற வெட்கம் ஒருபுறம், தோல்வியால் ஏற்பட்ட கோபம் ஒருபுறம் துன்புறுத்த அவ்விடத்தை விட்டு ஓடியே போனது. காகமும் தனக்குள் சிரித்துக் கொண்டு வடையை கவ்விக்கொண்டு தன் இருப்பிடம் பறந்தது.
சிறுவர் நீதிக்கதைகள் - பாட்டி வடை சுட்ட கதை
Reviewed by haru
on
August 04, 2012
Rating:

No comments