Ads Below The Title

சிறுவர் நீதிக்கதைகள் - துன்பம்!

துன்பம்:

அது பல படுக்கைகள் கொண்டபெரிய மருத்துவமனை.   அவற்றில்ஒரு அறையில் இரு தீவிர  நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒருதடுப்புச் சுவர். ஒருவர் படுக்கைசன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவதுவந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர தனிமை.. தனிமை.. தனிமை..!

சன்னல்படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவுநோயாளி.  நாளடைவில்நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளிசன்னல் நோயாளியிடம் சொன்னார்..

உனக்காவதுபொழுது போக்க, ஒரு சன்னல்இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..!” கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடேஎன்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவேகடைப்பிடிப்பேன்..!

அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபடதன் நண்பனுக்குக் கூறலானார்..  நண்பா.. சன்னலுக்கு வெளியே ஒரு பெரியஏரி.. நடுவில் சிறு தீவு.. ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில்அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை மறந்து கதைகள்பேசுகின்றனர்..!”

எலும்புநோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்.. சன்னல் நோயாளி இன்னொருநாள் சொல்வார்..

ஏரிக்கரைஓரமாக ஒரு சாலை.. அதில்மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம்தோழி ஏதோ சொல்கிறாள்.. மணப்பெண்முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!”

ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்குகேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம்போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்..

ஒருநாள்சன்னல் நோயாளி செத்துப்போனார்..

மீண்டும்எலும்பு நோயாளிக்கு வெறுமை  ஒருநாள்செவிலி வந்தபோது, தன் படுக்கையை சன்னல்ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது.

இனி எனக்கு நன்கு பொழுதுபோகும் என்று எண்ணியவாறே.. தன்எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல்மெல்ல தன் உடலை உயர்த்திசன்னல் வழியே நோக்க. அங்கேபெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை..!

அப்படியானால்சன்னல் நோயாளி சொன்ன கதைகள்?

மறுநாள்செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்..செவிலி, எலும்பு நோயாளிக்குஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியேசொன்னாள்..

நீங்கள்பார்க்கும் சுவர் கூட அவருக்குதெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோஇழந்துவிட்டிருந்தார்..!”

நீதி : தன் துன்பங்களை மறைத்துக்கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மிகச்சில மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்..  அவர்களைப்போற்றாவிட்டாலும் பரவாயில்லை.. குறைகூறாதீர்கள்..!
சிறுவர் நீதிக்கதைகள் - துன்பம்! சிறுவர் நீதிக்கதைகள் - துன்பம்! Reviewed by haru on August 04, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]