Ads Below The Title

MUTTAL ERUMBU TAMIL STORY

நிறைய எறும்புகள் ஒரு வீட்டில் வசித்து வந்தன. அந்த வீட்டில் சிந்தப்படும் தானியங்களும் , உணவுப் பண்டங்களும் அவற்றின் பசி தீர்க்கவும் , சேமித்து வைக்கவும் போதுமானவையாக இருந்தன. அவை அந்த வீட்டின் பின்புறத்தில் இருந்த ஒரு பொந்தில் சுகமாக வாழ்ந்து வந்தன .
அவற்றில் இரண்டு வாலிப எறும்புகளுக்கு அந்த வீட்டை முழுவதுமாக சுற்றிப் பார்க்க வேண்டுமென்று ஆசை வந்தது. எனவே இரண்டும் ஒவ்வொரு இடமாகத் திரிந்தன. பாத்திரங்கள் , கட்டில் , மேஜை , புத்தகங்கள் , துணிமணிகள் இப்படி ஒவ்வொன்றாய் வேடிக்கை பார்த்தன. புதிய இடங்களைப் பார்க்கப் பார்க்க அவற்றுக்கு ஒரே குதூலமாக இருந்தது. உற்சாகமாய்ப் பாடிக் கொண்டே ஓடி விளையாடின.
இப்போது விளக்குகளையும் , மின்விசிறியையும் பார்ப்பதற்காக சுவரில் ஏறி அவற்றையும் அருகில் சென்று பார்த்து ஆனந்தப் பட்டன. இதையெல்லாம் பார்க்காமல் இத்தனை நாட்களை வீணாக்கி விட்டோமே என்று கொஞ்சம் வருத்தப் பட்டன. வீடு திரும்ப வேண்டுமென்ற உணர்வு வந்தது. திரும்பி நடந்தன.
அப்போது அவற்றின் கண்களில் , இது வரை பார்த்திராத ஒரு பொருள் பட்டது. அது ஒரு வித்தியாசமான உயிரினம். நீளமான உடலும் , கூரிய நகங்களை உடைய கால்களுமாய் இருந்த அந்தப் பிராணி எந்தவிதமான அசைவும் இல்லாமல் சுவரோடு சுவராக
ஒட்டிக் கொண்டிருந்தது.
ஒரு எறும்பு அதற்கு அருகில் சென்று பார்க்க விரும்பியது. அது மற்ற எறும்பையும் உடன் வரும்படி அழைத்தது.
" வேண்டாம் நண்பா , அது என்ன பிராணி என்பது நமக்குத் தெரியாது . தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளாமல் வீட்டுக்குப் போய்விடலாம் " என்றபடி கிளம்பியது மற்ற எறும்பு. இதைக் கேட்டதும் முதல் எறும்புக்குக் கோபம் வந்துவிட்டது .
" இவ்வளவு இடங்களுக்கு என் கூட வந்தாயே , உனக்கு என்ன ஆபத்து நேர்ந்து விட்டது ? அப்படியே வந்தாலும் அது எனக்கும்தானே வரும் ? எந்த அசைவுமில்லாத ஒரு பிராணியால் என்னதான் பெரிய ஆபத்து வந்துவிடப் போகிறது ? வீணான பயத்தால் ஒரு நல்ல அனுபவத்தை இழக்கப் போகிறாய். நீ வந்தால் என்ன , வராவிட்டால் என்ன ? நான் போகத்தான் போகிறேன். தொடை நடுங்கிகள் தானும் சந்தோஷமாக இருப்பதில்லை . மற்றவர்களையும் மகிழ்ச்சியாக இருக்க விடுவதில்லை " .
சொல்லிக் கொண்டே அதன் அருகில் சென்றது.
உண்மையாகவே அது ஒரு திகிலான சந்தோஷந்தான். அந்தப் பிராணியின் தலைமுதல் வால் வரை ஒரே மாதிரியான நிறம். கடுகு போன்ற கண்கள். சொரசொரப்பான உடல் . பார்வைக்கு பயங்கரமாகத் தெரிந்தாலும் அதன் அமைதி உற்சாகம் கொடுத்தது.
பெருமையுடன் திரும்பி அதன் நண்பனைப் பார்த்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அதைக் காணவில்லை.
" முட்டாள் , முட்டாள் . வாழ்க்கையின் மிகப் பெரிய சந்தோஷத்தை இழந்து விட்டான் " . விழுந்து விழுந்து சிரித்தது. இப்போது உடலில் ஏதோ பட்டது போலிருந்தது. என்ன இது ? எறும்பால் தன்னை விடுவித்துக் கொள்ள இயலவில்லை. அது பல்லியின் நாக்கில் ஒட்டியிருந்தது. கதறக் கூட நேரமில்லாமல் பல்லியின் நாக்குடன் அதன் வாய்க்குள் போய் மறைந்து விட்டது. பல்லியின் மெளனத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள எறும்பு , தன் வாழ்க்கையையே விலையாகக் கொடுக்க வேண்டியிருந்தது .

வேதத்துக்கு முரணாகத் தோன்றுகிற காரியங்களை வேடிக்கை பார்க்கக் கூட நெருங்கிப் போகாதே. மீளவே முடியாதபடி சிக்கிக் கொள்ள நேரிடலாம்.
" விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்: பேதைகளோ நெடுகப் போய்த் தண்டிக்கப்படுகிறார்கள் " நீதிமொழிகள் 27 :12
MUTTAL ERUMBU TAMIL STORY MUTTAL ERUMBU TAMIL STORY Reviewed by haru on October 25, 2016 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]